சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8223 news
  •  ·  5 friends
  • I

    9 followers

ரூ.1,000 மதிப்பிலான பலூனை சுட்டு வீழ்த்த ரூ.3.63 கோடி செலவிட்ட அமெரிக்கா

அமெரிக்காவில் பருவகால அறிவியல் பற்றி பரிசோதனை மேற்கொள்வதற்காக அந்நாட்டின் எரிசக்தி துறை மற்றும் பிற குழுக்களுடன் இணைந்து பல்வேறு தனியார் அமைப்புகள் அறிவியல் பலூன்களை வானில் பறக்க விடுகின்றன. அமெரிக்காவில் வடக்கு இல்லினாய்ஸ் மாகாணத்தில் ஹாபி குரூப் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. அது பிகோ பலூன்களை பயன்படுத்தி வருகிறது. இந்த பிகோ பலூன் என்பது, வெப்பநிலை, ஈரப்பதம், அழுத்தம் அல்லது காற்றலைகள் பற்றி அளவிடுவதற்கான கண்காணிப்பு கருவிகளை உள்ளடக்கி இருக்கும். இந்த சூழலில், கடந்த வாரத்தில் சீன உளவு பலூன் விவகாரம் பரபரப்புடன் பேசப்பட்டது. எனினும், அது ஆராய்ச்சிக்காக அனுப்பிய பலூன் என்றும் தவறுதலாக அமெரிக்க வான்பரப்புக்குள் நுழைந்து உள்ளது என சீனா எடுத்து கூறியது. எனினும், இதனை உளவு பலூன் என்றே அமெரிக்கா கூறி வருகிறது. தொடர்ந்து அதனை சுட்டு வீழ்த்தியது. அதன் பாகங்களை கைப்பற்றி ஆய்வும் செய்து வருகிறது. தொடர்ந்து 2-வது முறையாக அத்துமீறிய மர்ம பொருளையும் வாஷிங்டன் சுட்டு வீழ்த்தியது.

 

உலகம் முழுவதும் 5 கண்டங்கள் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் வான்பரப்பில் அத்துமீறி இதுபோன்ற உளவு பலூன் திட்டத்தில் சீனா ஈடுபட்டு வருகிறது என்றும் சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டை சுமத்தியது. அமெரிக்காவின் இந்த செயல் சீனாவுடனான உறவை மோசம் ஆக்கியுள்ளது என்றே சீனா பதிலாக தெரிவித்தது. இந்நிலையில், கனடாவின் யுகோன் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த பிகோ பலூன் ஒன்றை அமெரிக்க அரசின் விமான படையை சேர்ந்த எப்-22 ரக போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் ஹாபி குரூப் அமைப்பு, பருவகாலம் உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்காணிக்க ஏதுவாக பிகோ பலூன்களை பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், அப்படி பறக்க விடப்பட்ட அதன் பலூன்களில் ஒன்று அலாஸ்கா மாகாணத்தில் கடந்த 11-ம் தேதி காணாமல் போயுள்ளது என கூறியுள்ளது. இந்த பலூனையே அமெரிக்க ஏவுகணை சுட்டு வீழ்த்தியுள்ளது என கூறப்படுகிறது. எனினும், இந்த இரு நிகழ்வுகளையும் அந்த அமைப்பு இணைத்து கூறாவிடினும், பலூன் சென்ற திசையை வைத்து பார்க்கும்போது, அதற்கான சாத்தியம் உள்ளது என கூறப்படுகிறது.

அந்த குழுவிற்கான இணையதளத்தில் வெளியான செய்தியில், கே.என்.ஒய்.ஓ. என்ற பலூன் ஆனது அலாஸ்காவில் ஹேக்மீஸ்டர் தீவு அருகே 11 ஆயிரத்து 560 மீட்டர் உயரத்தில் கடைசியாக பறந்து சென்றது என தெரிவிக்கின்றது. எனினும், சுட்டு வீழ்த்தப்பட்ட அதன் பாகங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் அந்த குழு தெரிவித்து உள்ளது. கடந்த 10-ம் தேதி கனடாவின் யுகோன் வான்பரப்பில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருளை அமெரிக்க அதிபர் பைடன் சுட்டு வீழ்த்த உத்தரவிட்டதன் அடிப்படையில், அது அமெரிக்க விமான படையால் வீழ்த்தப்பட்டது. இதுபற்றி அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறும்போது, அந்த மர்ம பொருள் ஒரு ராணுவ அச்சுறுத்தலை ஏற்படுத்துவது போன்று தெரியவில்லை என கூறியது. ஆனால், அதன் பறந்து செல்லும் பாதை மற்றும் கண்காணிப்பு பகுதியின் வழியே சென்றது, அதன் திசை ஆகியன மக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடும் என எண்ணப்படுகிறது என தெரிவித்தது. இவற்றை வைத்து பார்க்கும்போது, சீன உளவு பலூனை வீழ்த்துகிறோம் என கூறி, அமெரிக்க அரசு ரூ.1,000 மதிப்பிலான பலூனை சுட்டு வீழ்த்துவதற்காக ரூ.3 கோடியே 63 லட்சத்து 34 ஆயிரத்து 54 மதிப்புடைய ஏவுகணையை பயன்படுத்தி உள்ளது என கூறப்படுகிறது. 

  • 334
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads