Category:
Created:
Updated:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்காத கட்சிகள் அனைத்தும் அடிமை கட்சிகள் என்றும் திமுக வெற்றி பெற்றதும் முதல் கையெழுத்தாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினார்கள், ஆனால் மத்திய அரசிடம் இதுவரை குரல் கொடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
அதிமுக குறித்து விமர்சனம் செய்ய திமுகவுக்கு அருகதை இல்லை என்றும் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் சொத்துவரி விலைவாசி உயர்வு போதைப் பொருள் நடமாட்டம் மின்சார கட்டண உயர்வு ஆகியோரை குறித்து குரல் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.