சினிமா செய்திகள்
“மனசாட்சிப்படி வாக்களியுங்கள்!”  என சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்து தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
காலையில் முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.திருவான்மியூர்
சைக்கிள் ஓட்டிச் சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது
பாடகி ஜென்சி ஓரங்கட்டப்பட்ட மர்மம் என்ன?
சினிமாவில் நடிகர்களாக இருப்பவர்கள் ஒரு காலகட்டத்தில் ஜொலிப்பதும், பின்னாளில் மார்க்கெட் இழப்பதும் சர்வ சாதாரணமாக நடப்பதுதான். ஆனால் பின்னணி பாடகர்களை
இளைஞர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்
தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில
‘தங்கலான்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு
சென்னை ஏப்ரல் 17 2024- இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவிற்கு சொந்தமான முன்னணி தயாரிப்பு மற்றும் திரைப
 'மனுசி' படத்தின் டிரைலர் வெளியானது  (டிரைலர் வீடியோ இணைப்பு)
அறம்’ பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் ‘மனுசி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு ஆண்ட்ரியாவின் பிறந்தநாளில
குழந்தைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த சுலக்சனா
16 வயதில் நடிக்க வந்து 18 வயதில் திருமணம் செய்து 23 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாயான நடிகை சுலக்சனா விவாகரத்து பெற்று தனது குழந்தைகளை வளர்ப்பதற்காகவ
மும்பையில் 4000 ஆயிரம் சதுர அடியில்  புது வீடு வாங்கினார் பூஜா ஹெக்டே
தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெக
வைரலாகும் ‘விசில் போடு’ பாடல்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ சுருக்கமாக ‘கோட்’. இந்த படத்தில் பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்து
தமிழ் புத்தாண்டையொட்டி சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் காட்சிய
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்ட விஷால்
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்
Ads
 ·   ·  7499 news
  •  ·  5 friends
  • I

    9 followers

நடுவானில் 13 மணி நேர பயணம் செய்து புறப்பட்ட இடத்திலேயே தரையிறங்கிய விமானம்

முகப்புசெய்திகள்உலக செய்திகள் நடுவானில் 13 மணி நேர பயணம் செய்து புறப்பட்ட இடத்திலேயே தரையிறங்கிய விமானம்...! வினோத சம்பவம் தினத்தந்தி பிப்ரவரி 1, 4:56 pm (Updated: பிப்ரவரி 1, 4:56 pm) Text Size துபாயில் இருந்து நியூசிலாந்து நோக்கி புறப்பட்ட விமானம் 13 நேரம் பயணித்து மீண்டும் துபாயிலேயே தரையிறங்கியது. துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் விமான நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நோக்கி புறப்பட்டது. எமிரேட்ஸ் விமானத்தின் மிகவும் நீண்ட தூர பயண வழி துபாய் - ஆக்லாந்து இடையேயான தூரம் ஆகும். துபாய் - ஆக்லாந்து இடையேயான பயண தூரம் 16 மணி நேரம் ஆகும். இந்நிலையில், விமானம் ஆக்லாந்து நோக்கி புறப்பட்டு பாதி தூரத்தை கடந்திருந்தது. ஆனால், நியூசிலாந்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ஆக்லாந்து விமான நிலையத்தில் வெள்ளநீர் புகுந்தது. இதனால், ஓடுதளத்தில் விமானத்தை தரையிறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆக்லாந்து விமான நிலைய ஓடுதளம் வெள்ளநீரால் சூழ்ந்துள்ளது குறித்தும், விமானத்தை தரையிறக்க முடியாதது குறித்தும் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் அதிகாரிகள் ஆக்லாந்து நோக்கி வந்துகொண்டிருந்த எமிரேட்ஸ் விமான கேப்டனிடம் கூறினர்.

இதையடுத்து, பாதி தூரம் வந்த நிலையில் ஆக்லாந்தில் விமானத்தை தரையிறக்க முடியாததால் நடுவானில் விமானத்தை திருப்பிய கேப்டன் மீண்டும் துபாய் நோக்கி விமானத்தை இயக்கினார். பின்னர், மேலும் சில மணி நேர பயணத்திற்கு பின் ஆக்லாந்து நோக்கி புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் புறப்பட்ட விமான நிலையமான துபாய் விமான நிலையத்திலேயே பத்திரமாக தரையிறங்கியது. விமானம் ஒட்டுமொத்தமாக 13 மணி நேரம் நடுவானில் பறந்துள்ளது. 13 மணி நேரம் பயணம் செய்த விமானம் புறப்பட்ட துபாய் விமான நிலையத்திலேயே மீண்டும் தரையிறங்கியுள்ளது. 

கனமழை காரணமாக ஆக்லாந்துக்கு விமானம் ரத்து செய்யப்பட்ட நிலையில் நிலைமை சற்று சீரடைந்ததையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை எமிரேட்ஸ் விமானம் மீண்டும் துபாயில் இருந்து புறப்பட்டது. இந்த முறை 16 மணி நேரம் பயணித்த விமானம் நியூசிலாந்தில் பத்திரமாக தரையிறங்கியது. 

  • 181
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads