Category:
Created:
Updated:
தமிழ்நாட்டில் - நாகையில் இருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்து 4 நாட்களுக்கு முன்பு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
இந்த நிலையில், எல்லை தாண்டி கடலில் மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் 11 நாகை மீனவர்களை இன்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பருத்தித்துறை துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், 11 தமிழக மீனவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.