Category:
Created:
Updated:
வேலூர் மாவட்ட காவல்துறையில் மோப்ப நாய் பிரிவில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் துப்பு துலக்க உதவியாக இருந்த நாய் சிம்பா.
இந்த மோப்பா நாய் இதுவரை 250 க்கும் அதிகமான கொலை, கொள்ளை வழக்குகளில் துப்பு துவக்க உதவியாய் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்ட இந்த சிம்பா சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதற்கு புற்று நோய் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், சிகிச்சைபலனின்றி சிம்பா நேற்று இறந்ததாக காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.