சினிமா செய்திகள்
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
காலத்தால் அழியா கலைஞன் குலதெய்வம் ராஜகோபால்
விவேக்கிற்கு முன்பே ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டத்தைப் பெற்றவர் குலதெய்வம் ராஜகோபால். ஓப்பீடே இல்லாத நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கலைஞர். தனது நகை
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையின் பின்னணியில் ஆயுதப்படைகளே உள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சுடர்சனின் "பயணம்" எனும் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் இப்போது நாம் பத்திரிகைகளை பார்க்கும் போது எமது மண்ணில் இடம்பெறும் சட்டவிரோத செயல்கள் தொடர்பிலும் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலும் விபத்துக்கள் தொடர்பிலுமே அதிக செய்திகள் இருக்கின்றன. விபத்துகளாலும் தற்கொலைகளாலும் எமது இளம் தலைமுறையினர் மரணிக்கின்றனர் இவற்றுக்கான பிரதான காரணமாக இருப்பது எமது மண்ணில் தலைவிரித்தாடும் போதைப்பொருள் பாவனையே ஆகும்.இலங்கையிலுள்ள படைகளில் ஏறத்தாழ 70 சதவீதமானவர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களிலேயே குவிக்கப்பட்டிருக்கின்றனர். போதை வஸ்தை கொண்டுவர அனுமதிப்பவர்களும் அதனை கொண்டு வருபவர்கள் மற்றும் விற்பவர்களை ஊக்குவிப்பவர்களாகவும் அவர்களே காணப்படுகின்றனர்.போதைப் பொருள் வியாபாரிகளை பொலிசார் கைது செய்வதில்லை. பெருந்தொகையான கஞ்சா இங்கு கடத்தப்படுகின்றது என்றால் அதனை தடுக்கின்ற வல்லமை இலங்கையின் படைகளுக்கு இல்லையா? இவர்கள் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கவும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்கவும் மட்டும் இவர்களுக்கு தெரியுமா?தமிழ் இளைஞர்களை தமது இனம் பற்றியோ தேசம் பற்றியோ சிந்திக்க விடாது தடுக்கும் நோக்கில் திட்டமிட்டே போதைப்பொருள் பாவனையை இவர்கள் ஊக்குவிக்கிறார்கள். இவற்றுக்கு மத்தியிலும் 20 வயதே ஆன இளைஞன் டர்சன் தன் தேசம் பற்றியும் இனம் பற்றியும் பயணம் எனும் கவிதைத் தொகுப்பு நூலினை வெளிடுவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.போதைப்பொருள் பாவனையில் இருந்து எமது எதிர்கால சந்ததியினரை மீட்க வேண்டிய பொறுப்பு வெறுமனே அரசியல் வாதிகளிடம் மட்டும் சுமத்தமுடியாது சமூகப் பொறுப்புணர்ந்து அனைத்து தரப்பினரும் இணைந்தே கட்டுப் படுத்த வேண்டும். பெற்றோர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் மதத் தலைவர்கள் அரச உத்தியோகத்தர்கள் அரச சார்பற்ற அமைப்புக்கள் ஆகியவற்றுடன் ஒவ்வொரு தமிழனும் சிந்தித்து இளம் சமூகத்தினரை அழிவில் இருந்து மீட்க வேண்டும்.கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் முதல்வர் மீனலோஜினி இதயசிவதாஸ் தலைமையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் பச்சிலைப்பள்ளி பிரதேச தவிசாளர் சுரேன் அருட்தந்தை அருட்சகோதரிகள் ஆசிரியர்கள் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

  • 340
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads