Category:
Created:
Updated:
நல்லிணக்கத்திற்கான அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஒக்.17) பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த அமைச்சரவை உபகுழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
பிரதமர் தினேஷ் குணவர்தன, நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.