சினிமா செய்திகள்
பிரபல நடிகையின் ஆடையை மிதித்ததால் சர்ச்சையில் மாட்டினார் அக்‌ஷய்குமார்
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் பாலிவுட்டில் அதிகம் சம்பளம் பெரும் நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவ
’தலைவர் 171’ டைட்டில் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில
ஆபாச நடிகை என்று கூறிய விவகாரம் - கங்கனா ரணாவத் விளக்கம்
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ஊர்மிளா மடோன்கர். அதன்பினர், ரங்கீலா, சத்யா, ஜூடோய் உள்ளிட்ட பல படங்கலில் நடித்திருந்தார். இவர
வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே
கர்ப்பமாக இருக்கும் அமலா பால் - நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோ ஷூட்
தமிழ் சினிமாவில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'மைனா' படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் மனதை கட்டி போட
சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு திருமணம்
சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயத
எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு கஷ்டம்: டி.எம்.எஸ்
தான் பாடுவது போல் தெரியாமல் திரையில் தெரியும் அந்த நடிகர் பாடிக்கொண்டு நடிப்பது போல அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் திறன் படைத்தவர் டி.எம்.சௌந்திரராஜன
விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சேசு, இன்று தனது 60வது வயதில் காலமானார்.மாரடைப்பால் கடந்த 10 நாட்களாக சென்ன
கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்
நீயா நானா பாத்திடலாம்!. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்!.. கடைசியில என்ன நடந்தது!..கவுண்டமணி நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது நா
டி. எம். சௌந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
"அதிர்ஷ்டம் என்பது எப்போதோ ஒருமுறைதான் கதவைத் தட்டும்."‘தூக்குத்தூக்கி’.சிவாஜி நடிப்பில் இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். படத்தில் மொத்தம் எட்
Zoom செய்து பார்த்த ரசிகர்கள் - சிக்கிய ஸ்ரீலீலா
சில வீடியோக்களை பார்த்து நடிகைகளை கலாய்த்தும் பங்கம் செய்தும் காமெடி வீடியோக்கள் இணையத்தில் வெளி வந்து வைரலாகி வருதை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில்
ஜாக்கெட் அணியாமல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டார் பிரியாமணி
பிரியாமணி கடந்து 2010 ஆம் ஆண்டில் முஸ்தபா ராஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.திருமணத்திற்கு பிறகு சில வருடம் திரைப்படங்க
Ads
 ·   ·  52 news
  • 1 members
  • 0 friends

யாழ்,அரியாலையில் ஐந்நூறு(500) குடும்பங்களுக்கு குடிநீர் வசதி!

யாழ் அரியாலை பகுதியில் குடிநீர் வசதியின்றி நீண்ட காலமாக கஷ்டப்பட்டு வந்த ஐந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடி நீர் பெறுவதற்காக குழாய்க்கிணறு வசதி ஏற்படுத்தித் தருமாறு அரியாலை ஜே/96,97 கிராம சேவையாளர் பிரிவவுகளை உள்ளடக்கிய கலைவாணி சனசமூக நிலையத்தின் செயலாளர் திரு த.பிரவீன் அவர்கள் பூமணி அம்மா அறக்கட்களையின் இலங்கைக்கான செயலாளரும் முன்னாள் வட மாகாணசபையின் யாழ், மாவட்ட உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

குறித்த விடயத்தினை பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்,இலங்கை (ITR) பணிப்பாளருமான யாழ்,தீவகம் வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த திரு. விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, ருபா இரண்டு லட்சத்து அறுபத்தி ஐந்தாயிரம்(265000.00) செலவில் அரியாலை கலைவாணி சனசமூக நிலையத்திற்கு சொந்தமான  சின்னாலங்கண்டு வீதியில் உள்ள காணியில் அறக்கட்டளையால் குழாய்க்கிணறு வசதி ஏற்படுத்தி, குடி நீர்த்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த பகுதியில் உள்ள பொன்னம்பலம் வீதி, சின்னாலங்கண்டு வீதி,முள்ளி வீதி,கலைவாணி வீதி,கேணியடி வீதி,A9 வீதி வீதி, குகன் வீதி, நெடுங்குளம் வீதி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், குடிநீர் பெறுவதற்காக இக் குடிநீர்த் திட்டத்தினை பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவர் திரு விசுவாசம் செல்வராசா அவர்கள் இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்து,பெயர்ப் பலகையினை திரை நீக்கம் செய்து மக்கள் பாவனைக்காக கலைவாணி சனசமூக நிலைய நிர்வாகத்தினரிடம் கையளித்தார். 

குறித்த குடிநீர்த் திட்டத்துக்கான நிதிப் பங்களிப்பினை கனடா ரொறண்டோவைச் சேர்ந்த பூமணி அம்மா அறக்கட்டளையின் தீவிர செயற்ப்பாட்டாளரும்(ITR) வானொலி சேவையின் தீவிர அபிமானியுமான திரு,திருமதி மோகனதாஸ் சாந்தகுமாரி தம்பதியினரின் முப்பத்தியொராம் ஆண்டு திருமண நன்நாளை முன்னிட்டு அவர்களின் நிதிப் பங்களிப்பில் இத்திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டது.

கலைவாணி சனசமூக நிலையத் தலைவர் திரு ஜெ.தருமராஜா தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் கலைவாணி முன்பள்ளி சிறார்களுக்கான கலை நிகழ்வுகளும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம் பெற்றதோடு பெற்றோருக்கான கலை நிகழ்வுடன் பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம் பெற்றன.இன்றைய நிகழ்வில் பூமணி அம்மா அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம்,இணைப்பாளர்,T.ஜோசேப் சனசமூக நிலையத்தின் செயலாளர் த.பிரவீன்,பொருளாளர் இ.சுந்தரகுமார் உட்பட பல பொது மக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

  • 273
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads