சினிமா செய்திகள்
நயன்தாரா மூன்றாவது முறையாக ஜோடி சேரும் நடிகர்
விஜய் சேதுபதி குறிப்பிட்ட படங்களில் தான் நடிப்பேன் என்று இல்லாமல், தன் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்ப
இறக்கும் தருவாயில் மனைவியிடம் இரண்டு சத்தியங்கள் வாங்கிய கணவர்
சினிமா உலகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமான ஒருவர் என்றால் அது கண்டிப்பாக பாலுமகேந்திராவாதான் இருக்க முடியும். அதிலும் ஒளிப்பதிவாளராக இவர் காட்டு
ஒரு மணி நேரத்தில் பாடலை பாடி அசத்திய விஜய்
விஜய் பன்முகத் தன்மை கொண்டவர் என்பது பலரும் அறிந்ததே. ஹீரோவாக நடிக்க தகுதி இல்லை என பலரும் கேலி, கிண்டல் செய்த நிலையில் பல திறமைகளை வளர்த்துக் கொண்டார
கஜ தானம் (யானை தானம்)
திருச்சி அருகே திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிகோவிலில் உள்ள யானை நடிகர் திலகம் சிவாஜியால் வழங்கப்பட்டது.அந்த யானையை பராமரிக்க முடியாத நிலையில் கோவில் ந
விருதுகளை அவமதித்த நடிகர் நசுருதீன் ஷா
இந்தி திரையுலகின் மூத்த நடிகர் நசுருதீன் ஷா. இவர் விருதுகளை அவமதித்து கருத்து தெரிவித்து உள்ளதாக சர்ச்சை கிளம்பி உள்ளது.நசுருதீன் ஷா அளித்துள்ள பேட்டி
திரிஷாவிற்கு அதிகரிக்கும் அழகும், படவாய்ப்பும்
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிறகு திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. குந்தவை கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதா
கோவிலில் கீர்த்தி சனோனை கட்டிபிடித்து முத்தம் கொடுத்த இயக்குனர்
பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷியாம் ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்தன. தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வர நடிகர் பிரபாஸ் தேர்ந்தெடுத்த திரை
காரின் மறைவில் உடை மாற்றிய நடிகை
நடிகை மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யா சாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் பெங்களூரை சேர்ந்தவர். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகா
மீண்டும் தமிழ் படத்தில் கங்கனா
இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கங்கனா ரணாவத் ஏற்கனவே தாம்தூம் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இதில் ஜெயம்ரவி ஜோடியாக வந
40 வருடங்களாக வாடகை வீட்டில் வசிக்கும் ஷகீலா
கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகீலா. மலையாளத்தில் இவர் நடிப்பில் ஏகப்பட்ட படங்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மலையாளத்தில் இவருக்கு ஏகப்பட்ட ரச
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய விஜய் வெங்கட்பிரபு கூட்டணி
விஜய் மற்றும் வெங்கட் பிரபு இணையும் தளபதி 68 படத்தை பற்றித்தான் ஒட்டுமொத்த திரையுலகமும் பேசி வருகின்றனர். விஜய் தற்போது லியோ படத்தில் பிசியாக நடித்து
காதலும் கிடையாது. கல்யாணமும் கிடையாது – அஜித் மச்சான்
அஜித் மனைவி ஷாலினிக்கு ஷாம்லி என்ற தங்கையும், ரிச்சர்ட் ரிஷி என்கிற சகோதரரும் உள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் சிறு வயதில் இருந்தே நடித்து
Ads
 ·   · 656 news
  •  · 16 friends
  • S

    24 followers

ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய நெடுந்தீவு பவி ஆக்கிய 'பனித்துளியில் ஒரு வெப்பம்' நூல் வெளியீட்டு விழா.

பனி குளிர்ச்சியின் குறியீடு, வெப்பம் சிதைப்பின் அடையாளம். முள்ளியவளை வித்தியானந்த கல்லூரி ஆசிரியரும், படைப்பாளருமாகிய நெடுந்தீவு பவி என அறியப்படும் அ.பவிக்குமார் படைத்த 'பனித்துளியில் ஒரு வெப்பம்' கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது, 25.09.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 09.45 மணிக்கு, ஈழத்தின் யாழ்ப்பாணம் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. நிகழ்வானது நூலாசிரியரின் தந்தையார் லீ.அமலதாஸ் தலைமையில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக நெடுந்தீவு உதவிப் பிரதேச செயலர் கெல்ஸ்மன் பங்கேற்றார்.

முன்னதாக விருந்தினர்கள், பங்கேற்பாளர்கள் வரவேற்பு இடம்பெற்றது. பொதுச்சுடர் ஏற்றல், அகவணக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தினை மாணவிகளான துசானா, கலைச்செல்வி, துவாரகா ஆகியோர் இசைத்தனர். இறைவணக்க இசையினை யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் கோகுலன் சாகித்தியன் இசைத்தார். தொடர்ந்து கலைச்செல்வி, துவாரகா ஆகியோர் இசைத்தனர். வரவேற்பு நடனத்தினை யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலை மாணவி கோகுலன் கேசவி நிகழ்த்தினார். அறிவிப்பாளர் நெடுந்தீவு சபேசன் அவர்களின் நிகழ்ச்சித் தொகுப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வரவேற்புரையினை ஆசிரியர் எஸ்.ஜே.ஆதி வழங்கினார். ஆசியுரையினை யாழ்.தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் திருமதி.உதயகுமார் வழங்கினார். நூலாசிரியருக்கு கற்பித்தவரும், யாழ்.சைவப்பிரகாச வித்தியாலய பிரதி அதிபருமாகிய ஏ.பீலிக்ஸ் ஜேக்கப் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வின் சிறப்பு விருந்தினரான முள்ளியவளை வித்தியானந்த கல்லூரி முன்னாள் அதிபர் பி.கே.சிவலிங்கம் நூலாசிரியரின் படைப்புலக பயணத்தின் பதிவுகளை பகிர்ந்துகொண்டார்.

நூலின் வெளியீட்டுரையினை யோ.புரட்சி நிகழ்த்தினார். நூலினை நெடுந்தீவு உதவிப் பிரதேச செயலர் வெளியீடு செய்ய, முதற்பிரதியினை அமலதாஸ் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து நூலாசிரியருக்கான மதிப்பளிப்பினை, திருவள்ளுவரின் சிலையினை பல்லக்கில் ஏற்றி புலம்பெயர் மண்ணில் பெருமைப்படுத்தியவரும், தனித்தமிழ் பயன்பாடு, தமிழ்ப்பண்பாடு ஆகியவற்றிற்கான தொடர் முன்னெடுப்புக்களை மேற்கொள்பவருமான சுவிட்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பாடசாலை முதல்வர் 'பூநகரியான்' என்கின்ற, திரு. பொன்னம்பலம் முருகவேள் அவர்கள் சார்பாக, திருவள்ளுவர் நற்பணி மன்றத்தின் நிறுவுநர் க.நவரத்தினம் அவர்கள் வழங்கினார். பொன்னம்பலம் முருகவேள் அவர்களின் ஒழுங்கமைப்பில் பூநகரி பிரதேசத்திலுள்ள பத்துப் பாடசாலைகளுக்கு வழங்குவதற்காக 'பனித்துளியில் ஒரு வெப்பம்' நூல்கள் கொள்வனவு செய்யப்பட்டு நூலாசிரியருக்கு ஊக்குவிப்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து பங்கேற்பாளர்கள் நூற்பிரதியை பெற்றுக்கொண்டனர். நூலின் நயவுரையினை யாழ்ப்பாணம் தேசிய தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் கலாநிதி.எஸ்.பத்மராஜா நிகழ்த்தினார். நிகழ்வில் சிறப்பம்சமாக விழிப்புலனற்ற இசைக்கலைஞர் ரி.மிதுசன் அவர்களின் அன்னை பற்றிய பாடலும் இடம்பெற்றது. இவ்வாண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் பிறையில் முறையில் பரீட்சை எழுதி 3A சித்தி பெற்ற வாழ்வக மாணவி உசா கேசவன் அவர்கள் நிகழ்வில் மதிப்பளிக்கப்பட்டார். இம்மாணவி மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும்,
தேசிய மட்டத்தில் 22ஆம் இடத்தினையும் பெற்றிருந்தார்.

பிரதம அதிதி உரையினைத் தொடர்ந்து ஏற்புரையுடனான நன்றிப் பகிர்வினை நூலாசிரியர் நெடுந்தீவு பவி வழங்கினார். நூலாசிரியரான நெடுந்தீவு பவி அவர்கள் யாழ்.தேசிய கல்வியியற் கல்லூரியில் கற்றுக்கொண்டிருக்கும்போது 'நான் பார்த்த உலகம்' நூலினை வெளியீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 191
  • More
Attachments
Comments (0)
    Info
    Created:
    Updated:
    Ads
    Latest News
    1-24
    Ads
    Ads
    Local News
    Empty
    Featured News
    1-24
    Ads