சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8223 news
  •  ·  5 friends
  • I

    9 followers

அதிகாரப்பூர்வ பதவியேற்பு விழாவில் கோபமடைந்த அரசர் 3-ம் சார்லஸ்

இங்கிலாந்து நாட்டின் ராணியாக ஆட்சி செய்தவர் ராணி இரண்டாம் எலிசபெத். 1952-ம் ஆண்டு முதல் 70 ஆண்டுகளுக்கும் கூடுதலாக ராணியாக இருந்தவர் கடந்த வியாழ கிழமை உடல்நல குறைவால் சிகிச்சை பெற்ற நிலையில் காலமானார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. இதனையடுத்து இங்கிலாந்தின் புதிய அரசராக இளவரசர் 3-ம் சார்லஸ் (வயது 73) அறிவிக்கப்பட்டார். 

சார்லஸ் பிலிப் ஆர்தர் ஜார்ஜ் என்ற இயற்பெயர் கொண்ட 3-ம் சார்லஸ், ராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். அவர் முறைப்படி அரசராக பொறுப்பேற்று கொண்டார். இதேபோன்று, ஆஸ்திரேலியாவின் தலைவராக அரசர் 3-ம் சார்லஸ் நேற்று முறைப்படி அறிவிக்கப்பட்டார். இங்கிலாந்து அரசராக 3-ம் சார்லஸ் பொறுப்பேற்று கொண்ட நிலையில், அவரை பற்றி அறிய மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், டுவிட்டரில் வெளியான வீடியோ ஒன்றால் அவர் பிரபலமடைந்து வருகிறார்.

சமீபத்தில் இதுபற்றிய வீடியோ ஒன்றில், அவரை கோபமடைய செய்த நிகழ்வுகள் பற்றிய காட்சிகள் வெளிவந்து வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில், 3-ம் சார்லஸ் அரசராக பொறுப்பேற்கும் நிகழ்வின்போது, ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பு, அந்த மேஜையை தூய்மைப்படுத்தும்படி பணியாளர்களுக்கு சமிக்ஞை காட்டுகிறார். இந்த காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளன. எனினும், இதனை அரசர் கோபப்பட்டு விட்டார் என நினைத்து விட்டனர். ஒரு சிலர் நகைச்சுவையான நிகழ்வாக இதனை எடுத்து கொண்டுள்ளனர். ஒரு சிலர் இது சரியான செயலே என தெரிவித்து உள்ளனர். இதன்படி ஒருவர், அரசர் தனது ஆவணங்களை வைப்பதற்கு சிறிதளவே இடம் உள்ளது. போதிய இடம் இருக்கிறது என்பது ஊழியர்களாலேயே உறுதி செய்யப்பட வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

 

  • 415
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads