Category:
Created:
Updated:
பெருந்தோட்ட பகுதிகளில் விவசாயம் செய்கின்ற காணிகளை தோட்ட நிர்வாகத்திடம் கையளிக்குமாறு பெருந்தோட்ட அமைச்சின் பெருந்தோட்ட முகாமைத்துவ பணிப்பாளர் பிரிவின் அதிகாரி ஒருவர் கடிதம் மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார் என மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் தரிசு நிலங்களை விவசாயத்திற்கு பயன்படுத்துமாறு அனைவரிடமும் வேண்டுகோள்விடுத்துள்ளது.