Category:
Created:
Updated:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படும் நிலையில், இன்று தொற்று பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்துள்ளது. மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று 217- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 111 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 57,133 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து 17,887 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 145 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 1,231 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை.