சினிமா செய்திகள்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

சிங்கள மக்களே கோரிக்கைகளை முன் வைக்கின்ற அளவுக்கு இன்றைய நிலைமை மாறி இருக்கிறது. ஒரு தோற்றுப்போன அரசாங்கம் தோல்வியின் விளிம்பில் இருக்கின்ற ராஜபக்ச குடும்பம்

ஒரு தோற்றுப்போன அரசாங்கம் தோல்வியின் விழிம்பிலிருக்கின்ற  ராஜபக்ச குடும்பம் உடனடியாக போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்று நியாயமாக நடந்து கொண்டால் உலகப் பந்தில் தப்பிப் பிழைக்க கூடிய வாய்ப்புக்கள் உண்டு என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

சித்திரைப் புத்தாண்டு தினமான இன்று(14-04-2022) கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கமானது தனது மக்களை சரியான திசையில் மக்களை வழிநடத்தி மக்களை சரியான திசையில் வழிநடத்திச் செல்லாது ஊழல்களும் கொள்ளைகளும் மலிந்த ஒரு நாடாக மாறி சிங்கள மக்கள் கூடி தெருக்களில் இறங்கி போராடி வருகிறார்கள்.  குறிப்பாக இன்று மலர்ந்திருக்கிற இந்த புத்தாண்டை கூட கொண்டாட முடியாத நிலையில் தெருக்களிலே இருக்கின்ற ஒரு நாடாக இலங்கை காணப்படுகிறது.  எரிபொருள் எரிவாயு மின்சாரம் உணவுப் பொருட்கள் சரியாகக் கிடைக்க அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அவர்களது கோரிக்கைகளுக்கு சிறிதும் செவி சாய்க்காது மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு தீர்வு காணாமல் மாறாக போராடும் மக்கள் மீது பொய்களை அவிழ்த்து விட்டு விடுவதில் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது அதாவது தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு பட்டவர்கள் என்று கூறி அவர்களை திசை திருப்ப நினைக்கின்றது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு என்பது வடக்கு கிழக்கு மலையக வாழ் நமது தமிழ் உறவுகளையும் கடுமையாக பாதித்திருக்கிறது நாளாந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அன்றாடம் உணவுப் பொருட்கள் பால்மா வகைகள் எரிபொருள் எரிவாயு என்பவற்றுக்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

கோத்தபாய அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று சிங்கள மக்களே கோரிக்கைகளை முன் வைக்கின்ற அளவுக்கு இன்றைய நிலைமை மாறி இருக்கிறது. ஒரு தோற்றுப்போன அரசாங்கம் தோல்வியின் விளிம்பில் இருக்கின்ற ராஜபக்ச குடும்பம். உடனடியாக போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்று நியாயமாக நடந்து கொண்டால் உலகப் பந்தில் தப்பிப் பிழைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு இல்லையேல் உலக நாடுகளில் இது போன்ற தலைவர்கள் இல்லாமல் போன வரறுகள் கட்டியம் கூறி நிற்கின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  • 454
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads