Category:
Created:
Updated:
தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 51 ஆயிரத்து 815- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 265 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ஆறுதல் அளிக்கும் விதமாக இன்று புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. கொரோனா தொற்றைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 43 ஆயிரத்து 127 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 39 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.