சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 3 friends

கண்ணிவெடி அகற்றுதல் நடவடிக்கை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான டீசலினை பெற்றுத்தருமாறு மாவட்ட அரச அதிபரிடம் கோரிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் சர்வதேச தொண்டு நிறுவனத்தினர் தமது செயற்றிட்டத்தினை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான டீசலினை பெற்றுத்தருமாறு மாவட்ட அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பல்வேறு செயல்பாடுகள் முடங்கி போயுள்ளதுடன் பொதுமக்களும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிபொருளை பெற்றுக் கொள்வதில் பல்வேறு நெருக்கடிகள் காணப்படுகின்றன இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றல்  நடவடிக்கையில்; ஈடுபட்டு வரும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு பணியாளர்களை ஏற்றி இறக்குவது மற்றும் கனரக வாகனங்களை இயக்குவதற்கு எரிபொருள் பற்றாக்குறை காரணமாக வேலைகளை முன்னெடுப்பதில் தொடர்ந்தும் நெருக்கடி நிலை காணப்படுவதாக அந்நிறுவனத்தின் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கு தடையின்றி பணிகளை முன்னெடுக்க கூடிய வகையில் எரிபொருளை பெற்றுத்தருமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதுஇது தொடர்பில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் சர்வதேச தொண்டர் நிறுவனத்தினர் நேற்று முன்தினம் மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் வைத்து மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.இக் கலந்துரையாடலின் போது தற்போதைய காலத்தில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் தமது செயற்றிட்டத்தினை தடையின்றி முன்னெடுத்துச்செல்வதற்றகாக டீசலினை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதற்கு பதிலளித்த மாவட்ட அரசாங்க அதிபர் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இது தொடர்பில் தெரியப்படுத்தி நடவடிக்கையெடுப்பதாக தெரிவித்தார். மேலும் குறித்த பகுதியில் சுமார் 450 தொடக்கம் 500பணியாளர்கள் தங்கியிருந்து பணியாற்றுவதால் அவர்களுக்கான உணவுத்தேவைக்காக அம்மாச்சி போன்றதான ஓர் உணவகத்தை அமைப்பது தொடர்பிலும் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர்.

அதனூடாக வேலை வாய்ப்புக்கள் உருவாகுவதுடன் தமது பணி நடவடிக்கைகள் இலகுவாக்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தனர்.இது தொடர்பில் உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தி பரிசீலிப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.  குறித்த சந்திப்பில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் சர்வதேச தொண்டர் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் ஸ்ரிபன் ஹோல், நடவடிக்கை முகாமையாளர் விதூசன் அன்ரனி, அலுவலக முகாமையாளர் பா.ஜெயராஜிதன், அளவைகள் மற்றும் இணைப்பு அலுவலர் அருள்நேசராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.

  • 491
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads