Category:
Created:
Updated:
கச்சத்தீவு திருவிழா நாளை (11) ஆரம்பமாகவுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் இந்திய பக்தர்கள் 100 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்திய - இலங்கை இடையே கடல் எல்லையான கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் இந்திய-இலங்கை பக்தர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பது வழக்கம்.
இந்திய - இலங்கை பக்தர்களிடையே இணக்கமான உறவை மேம்படுத்த பாரம்பரியமாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலால் இந்த திருவிழாவில் பக்தர்கள் அதிகமாக கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. நாளை (11) ராமேசுவரம் துறைமுகப் பகுதியில் இருந்து 4 விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டு படகில் 100 பக்தர்கள் புறப்பட்டுச் செல்ல உள்ளனர்.