சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 3 friends

தமிழ்க் கலவன் பாடசாலைக்கு இளம் அதிபரை நியமித்து தாருங்கள் பெற்றோர் கெயெழுத்து போராட்டம்

கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு இளம் அதிபரை நியமித்து தாருங்கள் என தெரிவித்து பெற்றோர் கெயெழுத்து போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டம் இன்று காலை 7.30 மணியளவில் பாடாலை பிரதான வாயிலில் முன்னெடுக்கப்பட்டது. பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றம் கிராம மட்ட அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த குறித்த கையெழுத்து பெறும் போராட்டத்தில் தமது பாடசாலைக்கு இளம் அதிபர் ஒருவர் நியமித்து தருமாறு தெரிவித்து பெற்றோர் ஒப்பமிட்டனர்.2009ம் ஆண்டுக்கு முன்னர் குறித்த பாடசாலையில் இருந்த வளர்ச்சி தற்பொழுது இல்லாது போயுள்ளது. மாணவர் தொகையும் படிப்படியாக குறைந்துள்ளது. 1500 மாணவர்கள் வரை கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மாணவர் தொகை இன்று 250 பேராக குறைவடைந்துள்ளது. கடந்த வருடம் முதலாம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பில் 2 மாணவர்கள் மாத்திரமே இணைத்து கொள்ளப்பட்டனர்.அவ்வளவு தூரம் பாடசாலையின் வளர்ச்சி குன்றியுள்ளது. பாடசாலைக்கு கடந்த ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஓய்வுநிலைக்கு குறுகிய காலத்தை கொண்டவர்களாகவே நியமிக்கப்பட்டனர். அவர்களின் ஓய்வு காலத்திற்குள் குறித்த பாடசாலையை வளர்ச்சி பாதைக்குள் கொண்டு செல்ல முடியாது.யுத்தத்திற்கு முன்னர் மிளிர்ந்த எமது பாடசாலை இன்று வளர்ச்சி பாதையைவிட்டு கீழ் இறங்கி உள்ளது. இதற்கு காரணம் கல்வி அதிகாரிகள். அவர்கள் எமது பாடசாலையின் வளர்ச்சியை பற்றி சிந்திப்பதில்லை. தற்பொழுதும் நியமிக்கப்பட்டுள்ள அதிபர் ஓய்வு காலத்திற்கு குறுகிய காலப்பகுதியை கொண்டவராக இருக்கின்றார்.எமது பாடசாலையை கடந்த காலங்களைபோன்று வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கு இளம் துடிப்புள்ள அதிபரை நியமித்து தாருங்கள். அதற்கு பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர்கள், கிராம மட்ட அமைப்புக்களாக நாங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.அதற்காகவே இந்த கையெழுத்துகள் பெறப்பட்டு வடமாகாண ஆளுநரிற்கு அனுப்பி வைக்க உள்ளோம். எமது பாடசாலையின் நிலை தொடர்பில் வடக்கு மகாண ஆளுநர், அமைச்சின் செயலாளர் ஆகியுார் நேரடி கள ஆய்வினை மேற்கொள்ள வே்ணடும். வளர்ச்சி பாதை குன்றியமைக்கான காரணத்தை கண்டறிய வேண்டும். அதற்கான கால அவகாசத்தை தந்து கலந்துரையாடல் ஒன்றின் ஊடாக பாடசாலை அபிவிருத்தி தொடர்பில் ஆராய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் இதன்போது தெரிவித்தனர்.இவ்விடயம் தொடர்பில் பல்வேறுபட்ட தரப்பினருக்கு எழுத்து மூலமான கடிதங்களையும் அனுப்பியுள்ள போதிலும் திருப்தியான பதில் கிடைக்கவில்லை எனவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

  • 627
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads