Category:
Created:
Updated:
தங்காலை பொலிஸ் பிரிவின் நாகுலுகமுவ இஹலகொட பகுதியில் ஆலயம் ஒன்றுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஆடம்பர வாகனங்கள் நேற்றிரவு தீப்பிடித்து அழிந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு ஆடம்பர கார், இரண்டு வான்கள் இவ்வாறு தீயில் அழிந்துள்ளன. இவற்றின் பெறுமதி சுமார் நான்கு கோடி ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு 10.30 அளவில் இனந்தெரியாத சிலர் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை கொளுத்தி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.