Ads
உக்ரைனை முழுமையாகக் கைப்பற்றும் வரை போர் நீடிக்கும்!
உக்ரைனை முழுமையாகக் கைப்பற்றும் வரை போரைநிறுத்தப் போவதில்லை என்பதில் புடின் உறுதியாக உள்ளார். அதனால் போர் நிலைவரம் இன்னும் மோசமாகலாம் என்று எலிஸே மாளிகை இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளது.
மக்ரோனின் கோரிக்கையின் பேரில் புடின் இன்று அவருடன் சுமார் ஒன்றரை மணிநேரம் தொலைபேசியில் பேசினார். அந்தப் பேச்சுக்குப் பின்னர் மக்ரோன் அவர் மீது"நம்பிக்கை இழந்துள்ளார்" என்றும் போர் மேலும் படுமோசமான கட்டத்துக்குச் செல்லக்கூடும் என்று அவர் எதிர்பார்கிறார் எனவும் எலிஸே மாளிகை வட்டாரங்கள் கூறியுள்ளன.
Info
Ads
Latest News
Ads