சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 3 friends

கிளிநொச்சி மாவட்டத்தில் தனியார் சேவை முழுமையாக இடம்பெற 4000 லீட்டர் எரிபொருள் தேவை - கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்து தாருங்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் தனியார் சேவை முழுமையாக இடம்பெற 4000 லீட்டர் எரிபொருள் தேவையுள்ள நிலையில் பொருத்தமான நேரத்தில் கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்து தாருங்கள் என கிளிநொச்சி மாவட்ட தனியார் பேரு்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர்  கிருஸ்ணரூபன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

கிளிநொச்சி ஊடா மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கரு்தது தெரிவிக்கும்போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினை காரணமாக எமது பேருந்து சேவைகளை உரிய முறையில் நடார்த்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். முக்கியமாக மக்களை ஏற்றியவாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுக்கொள்வதனால் அவ்வந்த நேரங்களிற்கு மக்களிற்கான சேவையை செய்ய முடியாதுள்ளது.இந்த நிலை தொடர்ந்து அடுத்த வாரமும் இருக்குமாயின் எமது சேவையை மட்டுப்படுத்தி செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவோம். இதேவேளை எதிர்வரும் 7ம் திகதி பாடசாலைகைள் ஆரம்பிக்கப்பட இருப்பதால், அக்காலப்பகுதியில் எங்களால் வழமைபோன் முன்னெடுக்கப்படுகின்ற பாடசாலை சேவைகைளையும் முன்னெடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம்.இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் நேரில் சென்று கடிதம் ஒன்றை வழங்கியுள்ளோம். கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் அடித்தட்டு மக்கள் அதிகமாக வாழ்கின்ற மாவட்டம். தனிப்பட்ட வாகனங்களை பாவிப்பதைவிட் இவ்வாறான பொது போக்குவரத்தினையே அதிகளவான மக்கள் பாவிக்கின்றனர்.குறிப்பாக பாடசாலை மாணவர்கள், அரச உத்தியுாகத்தர்கள், வைத்தியசாலை மற்றம் அன்றாட வேலைகளிற்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பேருந்து சேவையையே பயன்படுத்தி வருகின்றனர். பொது போக்குவரத்தினை பொதுவாக செய்வதற்கு முன்னுரிமை அடிப்படையில் இப்பேருந்துகளிற்கு அன்றாடம் தேவையான எரிபொருளை குறிப்பிடட ஒரு நேரத்தில் வழங்குவதற்கு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் முன்வர வேண்டும் என இந்த ஊடக சந்திப்பின் ஊடாக வேண்டுகை விடுக்கின்றேன்.குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 80 பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றது. குறித்த சேவைகளிற்காக நாள் ஒன்றுக்கு சுமார் 4000 லீட்டர் எரிபொருள் எமது சங்கத்திற்கு தேவைப்படுகின்றது. இவ்வாறு தேவைப்படும் எரிபொருளை ஒரு வாரத்துக்கு தேவையான எரிபொருளை சேமித்து பொது போக்குவரத்திற்கு வழங்குவதற்கு அரசாங்க அதிபர் ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். அவ்வாறு ஏற்பாடுகள் செய்யப்படின் மாத்திரமே அடுத்தடுத்த நாட்களில் சேவைகளை மேற்கொள்ள முடியும்.இலங்கை போக்குவரத்து சபைகூட இன்று மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளையே செய்கின்றன. ஆனால் நாங்கள் ப்பில் உள்ள எரிபொருளையும், வரிசையில் நின்று பெற்றுக்கொள்ளும் எரிபொருளையும் பயன்படுத்தி சேவைகளை செய்து வருகின்றோம். இவ்வாறான நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பகலாயினும் சரி இரவாகினும் சரி பொருத்தமான ஒரு நேரத்தை ஒதுக்கீடு செய்து பேருந்துகளிற்கு அல்லது கொண்டு வரமுடியாத நிலையில் உள்ள பேருந்துகளிற்கான எரிபொருளை கொள்கலன்களில் வழங்குவதற்கு ஏற்பாடுகளை செய்து தர வே்ணடும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 10 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளன. அவ்வளிகள் ஊடாக எமது தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறுகின்றன. எம்மால் குாரப்பட்ட இந்த 4000 லீட்டர் எரிபொருளை இப்பத்து எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக பங்கிட்டு பெற்றுக்கொள்ள அரசாங்க அதிபர் ஆவணை செய்து உதவ வேண்டும் என கோருகின்றோம்.அவ்வாறு பெறப்படும் எரிபொருளை எமது சங்கத்தின் சிபாரிசின் மூலம் அளவுத்திட்டத்திற்கு அமைவாக எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பொது போக்குவரத்து சேவை முழுமையாக இடம்பெறுவதற்கு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் உதவ வேண்டும் என நான் மீண்டும் மீண்டும் நான் இந்த ஊடக சந்திப்பின் ஊடாக கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

  • 605
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads