சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8223 news
  •  ·  5 friends
  • I

    9 followers

உக்ரேன் போருக்கு மத்தியிலும் இலங்கை மீதான கவனம் குறையவில்லை

உக்ரேனில் கடுமையான போர் நடந்து கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்திலும் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஐ.நா.மனித உரிமை பேரவையின் கவனம் சற்றும் குறையாமல் தொடர்ந்தும் இருக்கின்றதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

உடுப்பிட்டியில் இடம்பெற்ற பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த 10 வருடங்களை மீளத்திரும்பிப் பார்க்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் இலங்கை மீதான மனித உரிமைகள் பேரவையின் கரிசனை குறையவில்லை. தொடர்ச்சியாக அந்த அழுத்தம் இருந்து கொண்டே தான் இருக்கின்றது.

இந்தத் தடவையும் ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் இடம் பெறவுள்ள சில நாட்களுக்கு முன்னதாக ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையில் மிக மோசமான போர்‌ நடந்து கொண்டிருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் இதனைக் கவனிக்கவேண்டியது அனைவரின் கடப்பாடு ஆகும். ஆனால் அப்படியான சந்தர்ப்பத்தில் இலங்கை தமிழர் விவகாரம் கவனிப்பாரற்றுப் போய்விடுமோ என்ற சந்தேகம் எழுந்தது.

ஆனால் இந்தத் தடவையும் மிகக்கடுமையான அறிக்கை ஐ.நா உயர் ஸ்தானிகரிடத்திலிருந்து வந்திருக்கின்றது. எதிர்வரும் 3ஆம் திகதி இது தொடர்பான கலந்துரையாடல் ஐ.நா.மனித உரிமைப்பேரவையில் இடம்பெறவுள்ளது. ஆகையால் உக்ரேனில் கடுமையான போர் நடந்துகொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்திலும் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற ஐ.நா.மனித உரிமை பேரவையின் கவனம் சற்றும் குறையாமல் தொடர்ந்தும் இருக்கின்றது.

இது சிறந்த விடயம் நாங்கள் அனைவரும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் யுத்தத்தின் கொடூரம் அறிந்த வகையில் உக்ரேனில் இடம் பெறுகின்ற போர் முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென கோரிக்கை விடுக்கின்றோம். எல்லா நாடுகளும் விடுக்கின்ற கோரிக்கையாக இருந்தாலும் கூட, 12 வருடங்களுக்குப் பிறகும் யுத்தக் கொடுமையை அதன் பாதிப்பை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற மக்கள் என்ற வகையில் உலக தரப்பில் ரஷ்யாவிடமும் இந்தப் போரை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கையை முன்வைக்கின்றோம் என்றார்.

  • 536
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads