Category:
Created:
Updated:
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நட்டாங்கண்டல் கொம்பு வைத்த குளம் பகுதியில் வயலுக்குச் சென்று திரும்பிய குடும்பஸ்த்தர் ஒருவர் கட்டுத்துவக்கில் சிக்கி காலில் காயமடைந்த நிலையில் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மாங்குளம் நட்டாங்கண்டல் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.