சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 3 friends

முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்பகுதிகளில் இந்திய மற்றும் வெளிமாவட்ட மீனவர்களின் சட்டவிரோத இழுவைப்படகுகள் பாதிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தின்  கடற்பகுதிகளில் இந்திய மற்றும் வெளிமாவட்ட மீனவர்களின் இழுவைப்படகுகள் மற்றும் சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுவதனால் தமது வாழ்வாதார தொழில்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு தொடக்கம் நல்ல தண்ணீர்தொடுவாய் வரையான சுமார் 73 கிலோமீற்றர் நீளமான கரையோரப்பகுதிகளை உள்ளடக்கிய வகையில் அமைந்துள்ள கடற்பகுதிகளில் சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்தொழிலாக கடற்தொழில்களை மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில் இவர்களது வாழ்வாதாரத்தொழில்களை பாதிக்கும் வகையில்; காலத்திற்கு காலம் பல்வேறு சட்டவிரோத தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதனால் இவர்களது வாழ்வாதாரத்தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் இதனால் தங்கள் வாழ்வில் எந்த விமோசனமும் இல்லையெனத் தெரிவித்துள்ளனர்.

இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளும் வெளி மாவட்ட மீனவர்களின் இழுவைப்படகுகளும்; சட்டவிரோத தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் தமது தொழில் நடவடிக்கைகள் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள இப்பகுதி கடற்தொழிலாளர்கள் ஏற்கனவே அட்டைத்தொழில், வெளிச்சம் பாச்சி மீன்பிடித்தல், சங்கு குளித்தல், போன்ற தொழில்களால் தமது தொழில்கள் பாதிக்கப்பட்டு வருகின்றபோதும் பருவகாலத்திலே செய்யும் இறால் உள்ளிட்ட தொழிலைக் கூட செய்ய முடியாத நிலமைகாணப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளனர்.எதிர்காலத்தில் கடற்தொழிலை விட்டு வேறு தொழிலை மேற்கொண்டே தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த வேண்டியுள்ளது என்றும் ஏராளமான கடற்தொழில் செய்யக்கூடிய இளைஞர்கள் வேறு கூலி வேலைகளுக்கு செல்லும் நிலமை காணப்படுகின்றது.எனவே இவ்வாறான சட்டவிரோத தொழில்களை கட்டுப்படுத்தி தமது தொழிலை செய்யக் கூடிய நல்ல ஒரு சூழலை ஏற்படுத்தித்தருமாறு உரிய அதிகாரிகளை பல தடவைகள் கோரியும் இதுவரை எந்தவித தீர்வுகளும் கிடைக்கவில்லை எனவும் சட்டவிரோத தொழில்களை தடுத்து நிறுத்தி தமது தொழில்களை மேற்கொள்ளக் கூடிய ஏதுவான சூழலை ஏற்படுத்தித்தருமாறு இப்பகுதி கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • 567
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads