சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8223 news
  •  ·  5 friends
  • I

    9 followers

மங்கள சமரவீரரின் நினைவுகளை பகிர்ந்த பிரதமர்

இலங்கை அரசியலில் அழியாத நினைவுகளை விட்டுச் சென்ற அரசியல்வாதியாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவைக் குறிப்பிடலாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர குறித்து இன்று (11) பாராளுமன்றத்தில் ஆற்றிய இரங்கல் உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், மங்கள சமரவீர கொழும்பு றோயல் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், லண்டனில் உள்ள புனித மார்ட்டின் உயர்கல்வி நிறுவனத்தில் தனது முதல் பட்டத்தையும் முடித்த பின்னர் 1983 இல் இலங்கை திரும்பினார்.

மங்கள சமரவீர 1988 இல் மாத்தறை தொகுதிக்கு தெரிவு செய்யப்பட்டதுடன், 1989 இல் முதன் முதலாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.

அன்று முதல் 31 ஆண்டுகளாக அரசியலில் தீவிரமாக இருந்தார். தன் வாழ்நாளின் இறுதி வரை தனக்கே உரிய அரசியல் கொள்கையிலும் தொலைநோக்கு பார்வையிலும் நின்ற ஒரு அரசியல் பிரமுகர் என்றே சொல்லலாம். 1989 இல் இலங்கைப் பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய முதல் உரையிலிருந்து 2020 பெப்ரவரியில் அவர் ஆற்றிய கடைசி உரை வரை அந்த அரசியல் தத்துவம் நன்கு விளக்கப்பட்டுள்ளது.

1988-89 கலவரத்தின் போது நிலவிய அநீதிக்கு எதிராக மங்கள சமரவீர ஒரு முன்னணியை உருவாக்கினார். அதன் இணை குழுத்தலைவராக பணியாற்றினேன்.

1977 முதல் 1994 வரையிலான 17 ஆண்டுகால மக்களின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக, குறிப்பாக 88-89 பயங்கரவாதத்திற்கு எதிராகவும், நீதி மற்றும் சமூக ஜனநாயகத்திற்கான எனது போராட்டத்தின் வெற்றிக்காகவும் திரு.மங்கள சமரவீர அவர்கள் ஆற்றிய பணியை நான் இத்தருணத்தில் விசேடமாக நினைவுருகிறேன்.

1994 ஆம் ஆண்டு முதல் அமைச்சரவை அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டதில் இருந்து, பல்வேறு அரசாங்கங்களில் பல பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்துள்ளார்.

தபால் மற்றும் தொலைத்தொடர்பு, நகர அபிவிருத்தி, துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து, வெகுசன ஊடகம், வெளிவிவகார மற்றும் நிதி அமைச்சர் என்ற பதவிகளை வகித்து தனக்கு வழங்கப்பட்ட பதவிகளை புதிய திசையில் கொண்டு செல்ல மங்கள சமரவீர அவர்கள் எப்போதும் முயற்சித்தார்.

அவர் நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட அரசியலில் படைப்பாற்றல் மிக்க ஒருவராவார். மங்கள சமரவீர சவால்களுக்கு மத்தியிலும் தனது கருத்துக்களில் இருந்து விலகாது எப்போதும் அந்தக் கருத்துகளுக்காகவே நின்றார்.

பின்னர் அவர் சித்தாந்த ரீதியாக வேறுபட்ட அரசியல் முகாம்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும், மங்கள அவர் இறக்கும் வரை எனது தனிப்பட்ட நண்பராகவே இருந்தார். இலங்கை அரசியலில் மகத்தான பிரமுகர் ஒருவரான மங்கள சமரவீர அவர்களின் மறைவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது மூத்த சகோதரி ஜயந்தி குணவர்தன உள்ளிட்ட குடும்பத்தினருக்கு எனது மற்றும் அரசாங்கத்தின் சார்பில் ஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

  • 497
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads