சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8225 news
  •  ·  5 friends
  • I

    9 followers

ஒமைக்ரானால் இந்தியா எதிர்கொள்ளப்போகும் மருத்துவ சவால் என்ன?

ஒமைக்ரான் பரவல் இந்தியாவில் வேகமெடுத்துள்ள சூழலில், தொற்று உச்சம் தொடும் போது இந்தியா எதிர்கொள்ளப் போகும் மருத்துவ சவால் என்னவென்று கூறியிருக்கிறார் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்.

இது தொடர்பாக அவர் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில்,

ஒமைக்ரான் அலையில் இந்தியா சந்திக்கவுள்ள மிகப்பெரிய சவால், மருத்துவப் பராமரிப்புக்கான தேவை அதிகரிப்பதே. ஒமைக்ரான் இந்தியாவில் அதிகவேகமாகப் பரவப் போகிறது. அப்போது மருத்துவத் துறைக்கு அழுத்தம் மருத்துவமனைகளின் உள் சிகிச்சைப் பிரிவிலிருந்து இருந்து புற நோயாளிகள் பிரிவுக்கு மாறும். ஐசியுக்களில் இருந்து அழுத்தம் மாறி வீடுகளிலேயே மருத்துவ சேவையும் ஆலோசனையும் தேவைப்படுவோர் ஏராளமானோர் காத்திருக்கும் சூழல் உருவாகும். மக்களுக்கு அறிகுறி இல்லாமல் இருக்கலாம். ஆனால், மருத்துவ ஆலோசனைக்காக அவர்கள் மருத்துவப் பணியாளர்களை சந்திக்க அதிக ஆர்வம் காட்டுவர். இந்த மாதிரியான தேவைகளை எதிர்கொள்ளவே நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

டெலிமெடிசினுக்கு முக்கியத்துவம்: இத்தகைய சூழலில் டெலி கன்சல்டன்ட் சேவைகளை அதிகப்படுத்த வேண்டும். இந்தியாவில் டெலிமெடிசின் சேவைகளை மேம்படுத்த இதுதான் தருணம். புறநோயாளிகள் பிரிவில் தேவையான அளவு மருத்துவர்கள், செவிலியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த ஒமைக்ரான் அலையில் ஒட்டுமொத்த அழுத்தமும் புறநோயாளிகள் பிரிவில் தான் இருக்கப் போகிறது. ஐசியுக்களில் அனுமதியாவோர் எண்ணிக்கையைவிட வீட்டில் மருத்துவ சேவை தேவைப்படுவோர் மிகமிகமிக அதிகமாக இருக்கப்போகிறது. நோயாளிகளை வீடுகளிலேயே வ்வைத்துப் பராமரித்தல் நல்லது. அது சாத்தியப்படாவிட்டால் தனிமைப்படுத்துதல் மையங்களை அமைக்கலாம். மேம்படுத்தப்பட்ட சிகிச்சை தேவைப்படுவோரை மற்றும் மாற்றலாம்.

அதேபோல், பொதுமக்களும் ஒமைக்ரான் வைரஸை சாதாரண சளியை ஏற்படுத்தும் காமன் கோல்ட் வைரஸ் போன்று நினைத்து அஜாக்கிரதையாக இருக்கும் அபாயமும் இருக்கிறது. ஒமைக்ரானின் தாக்கத்தை இப்போதைய சூழலில் மிதமானது, சாதாரண சளியைப் போன்றது என்றெல்லாம் புறந்தள்ள முடியாது.

தென் ஆப்பிரிக்கா, பிரிட்டனில் இருந்து வரும் தகவல் எல்லாம் ஒமைக்ரான் 4 மடங்கு அதிகம் பரவக் கூடியது என்பதையே உறுதியாக நிரூபித்துள்ளது. அதேவேளையில் மருத்துவமனையில் சேரும் அபாயம் 4ல் ஒரு மடங்காக இருக்கிறது. அதேபோல் மருத்துவமனையில் இணைநோய், தீவிர பாதிப்பு, மூச்சுத் திணறல் ஆகியன காரணங்களுடன் அனுமதியாவோரின் எண்ணிக்கை மற்ற திரிபுகளை ஒப்பிடும்போது ஒமைக்ரானில் மிகமிகக் குறைவாக இருக்கிறது.

  • 565
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads