சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 3 friends

முறிகண்டி பிரதேசத்தில் புதிய பொலிஸ் காவலரண்

முறிகண்டி பிரதேசத்தில் புதிய பொலிஸ் காவலரண் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமமான முறிகண்டி பிரதேசத்தில் இவ்வாறு பொலிஸ் காவல் நிலையம் ஒன்றை அமைத்து தருமாறு பிரதேச மக்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வந்தன.இந்த நிலையில் குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் சேவையை விஸ்தரிக்கும் வகையிலு்ம, குற்ற செயல்களை கட்டுப்படுத்தம் வகையிலும் குறித்த புதிய காவல் அரண் இன்று திறந்து வைக்கப்பட்டது.நாடு முழுவதும் புதிய காவல் நிலையங்களை அமைக்கும் சுபீட்சத்தை நோக்கி எனும் ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாறு காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குறித்த காவல் நிலையமானது இந்துபுரம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள செல்வபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.மாங்குளம் தலைமை பொலிஸ் நிலையத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள குறித்த காவல் நிலையத்தின் ஊடாக பல்வேறுபட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்படவுள்ளதுடன், நீதிமன்ற நடவடிக்கைக்குட்படாத அனைத்து விசாரணைகளும், சேவைகளும் வழங்கப்படவுள்ளதாக மாங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.குறித்த பொலிஸ் காவலரணினை வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் ஜெகத் பலிகக்கார திறந்து வைத்தார். குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கலும் திலகரட்ண, மாங்குளம் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிரிந்த உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டதுடன், சந்தன என்ற பொலிஸ் சாஜன் குறித்த காவலரணிற்கு பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.இதேவேளை, குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தம் வகையிலும், குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையிலும் சுற்று காவல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டமை தொடர்பில் மக்கள் வரவேற்றுள்ளனர்.இதுவரை காலமும் குறித்த பகுதி மக்கள் பல்வேறுபட்ட முறைப்பாடுகளிற்காக மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு செல்வதற்காக 25 கிலோ மீட்டர்வரை பயணிக்க வேண்டி ஏற்பட்டதுடன், அதிக நேரத்தையும், செலவினையும் எதிர்கொண்டனர். இந்த காவல் அரண் அமைக்கப்பட்ட நிலையில் சாதாரணமாக தீர்த்துக்கொள்ளக்கூடிய பிரச்சினைகளை உடன் தீர்த்துக்கொள்ள முடியும் என்பதுடன். ஏனையை சேவைகளிற்கு வசதியாகவும் அமையும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.குறித்த பொலிஸ் காவலரண் அமைக்கப்பட்ட பகுதிக்கு அண்மித்த பகுதியிலேயே அண்மையில் 36 வயதுடைய குடும்பத்தர் அவரது மனைவியின் துணையுடன் அவரது காதலரால் அடித்து கொலை செய்த சம்பவம் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

  • 752
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads