சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 3 friends

கிளிநொச்சி ஜெயந்திநகரில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்

இன்று (21-12+2021) பகல் சம்பவம் இடம்பெற்ற பகுதியை பார்வையிட்ட நீதவான் சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி உதவி் பொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.இதேவேளை, உயிரிழந்த 32 வயதான குடும்ப பெண்ணான நிலகரட்ண ஜெயசீலி என்பவரின் சடலத்தை அவரது தாயாரிடம் கையளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஆயினும் மரணம் தொடர்பில் ஏற்படுகின்ற சந்தேகங்களிற்கு உதவியாக குறித்த சடலத்தை புதைக்குமாறும் உறவினர்களிற்கு பணித்துள்ளார்.கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திநகர் பகுதியில் கடந்த (19.12.2021) சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பில் கடந்த (19.12.2021) திடீர் மரணவிசாரணை அதிகாரி சிங்கராசா ஜீவநாயகம் விசாரணை மேற்கொண்டிருந்தார். தொடர்ந்து குறித்த சடலம் பிசிஆர. பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு பிரேத பரிசோதனை இடம்பெற்றிருந்தது.விசாரணைகளில் சந்தேகம் எழுந்திருந்த நிலையில் 20.12.2021 நேற்றைய தினம் மாலை சட்ட வைத்திய அதிகாரி ஆர்.தனுசன் சம்பவம் இடம்பெற்ற இடத்தை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.குறித்த சம்பவம் கடந்த (18) இரவு இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்தது.. வாடகை வீட்டில் வசித்து வந்த சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தரான 32 வயதுடைய என்ற 03 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி விநாயகபுரம் இயக்கச்சி பகுதியை சேர்ந்த இவர் தொழிலின் நிமித்தம் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.இவரது கணவர் பிரிந்துள்ள நிலையில் 3 பிள்ளைகளுடன் தனித்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் இவரது மூத்த பிள்ளைகள் இரண்டும் தாயாருடன் பணிபுரியும் பெண்ணின் வீட்டில் வழமையாக தங்குவர்.சம்பவம் இடம்பெற்ற இரவும் வழமைபோல இரண்டு பிள்ளைகளும் சென்றுள்ளனர். அதே வேளை கடைசி பிள்ளை தாயாருடன் வழமைபோல நின்றுள்ளது.இந்த நிலையில் ஆரம்பகட்ட விசாரணைகளில் பெண்ணின் மரணத்தில் பலத்த சந்தேகம் எழுந்திருந்தது. இந்த நிலயைில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உடற்கூறற்று பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு மன்று கட்டளையிட்டிருந்தது.இந்த நிலையில், மரண விசாரணைகளின் போது எழுந்துள்ள சந்தேகத்தை அடுத்து சட்ட வைத்திய அதிகாரி சம்பவ சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டிருந்தார்.இந்த நிலயைல் இன்று (21.12.2021) பகல் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் சம்பவம் இடம்பெற்ற இடத்தை பார்வையிட்டிருந்ததுடன், சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறும், முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குறிப்பிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.இந்த நிலையில் குறித்த பெண்ணின் சடலம் அவரது தாயாரிடம் கையளிக்கப்படவுள்ளதுடன, இறுதி கிரியைகள் கெக்கிராவ எனும் அவர்களது பூர்வீக இடத்தில் இடம்பெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

  • 914
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads