Category:
Created:
Updated:
வவுனியா கொக்குவெளி பகுதியில் கிணற்றில் நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் மாயமாகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிராம மக்களின் தொடர்சியான முயற்சியால் கிணற்று நீர் வெளியில் இறைக்கப்பட்டு நேற்று (20) இரவு 11.30 மணியளவில் அந்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் பெயர் அகிலேஸ்வரன் தனுசன் வயது 16 என தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாமடு பொலிஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.