
வன்னி விளாங்குளம் மற்றும் அம்பாள் புரம் ஆகிய பகுதிகளில் தொடர்சியாக பெய்த மழை காரணமாக பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு.
முல்லைத்தீவு வன்னி விளாங்குளம் மற்றும் அம்பாள் புரம் ஆகிய பகுதிகளில் அண்மைய நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதுடன் தமது வாழ்வாதார பயிர்களும் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் பிரதேசத்தில் மழை காரணமாக சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் மேற் கொள்ளப் பட்டிருந்த பல்வேறு வகையான பயிர் செய்கைகள் யாவும் தொடர்சியாக பெய்த மழை காரணமாக முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதாவது குறித்த பகுதியில் வெள்ளத்தினால் சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்ட விவசாயி தெரிவித்துள்ளார்.அறுவடைக்கு தயாராக இருந்த பப்பாசி மற்றும் மிளகாய் செடி கொடித்தோடை போன்ற பயிர்கள் முழுமையாக அழிவடைந்து காணப்படுகின்றன.இவ்வாறு ஏற்படுகின்ற அழிவுகளுக்கு இதுவரை எந்தவிதமான நஷ்டங்களும் கடந்த காலங்களில் சரி இதுவரை கிடைப்பதில்லை என்றும் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.