சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8223 news
  •  ·  5 friends
  • I

    9 followers

தங்கமணியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவர் தொடர்புடைய 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.2.16 கோடி கைப்பற்றப்பட்டது.

கடந்த 2016 முதல் 2021-ம் ஆண்டு வரை தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் பி.தங்கமணி. தற்போது குமாரபாளையம் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறார். அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.85 கோடிக்கு சொத்து சேர்த்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி (60), அவரது மனைவி டி.சாந்தி (56), மகன் டி.தரணிதரன் (32) ஆகியோர் மீது நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து சென்னை, நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள தங்கமணி மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். சென்னையில் எம்எல்ஏக்கள் விடுதியில் உள்ள தங்கமணியின் அறை, பனையூர் பண்ணை வீடு உட்பட 14 இடங்களில் சோதனை நடந்தது.

நாமக்கல் மாவட்டம் ஆலாம்பாளையம் அடுத்த கோவிந்தம்பாளைத்தில் உள்ள பி.தங்கமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது தங்கமணியும், அவரது மனைவியும் வீட்டில் இருந்தனர்.

தங்கமணியின் தனி உதவியாளர் சேகர், பள்ளிபாளையம் முன்னாள் நகராட்சித் தலைவர் வெள்ளியங்கிரி, தங்கமணியின் நண்பரும் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவருமான டி.கே.எஸ்.சுப்பிரமணியம், தங்கமணியின் சம்பந்தி சிவசுப்பிரமணியம், அவரது தம்பி மூர்த்தி, தங்கமணியின் சகோதரி நாகரத்தினம், ‘நியூஸ் ஜெ’ தொலைக்காட்சி உரிமையாளரான தங்கமணியின் மருமகன் தினேஷ் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.

சேலத்தில் உள்ள தங்கமணியின் மகன் தரணிதரன் வீடு, அலுவலகம் மற்றும் அரசு ஒப்பந்ததாரர் குழந்தைவேலுவின் வீடு, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள தங்கமணியின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

நாமக்கல்-33, சென்னை-14, ஈரோடு-8, சேலம்-4, கோவை-2, கரூர்-2, கிருஷ்ணகிரி-1, வேலூர்-1, திருப்பூர்-1, கர்நாடக மாநிலம் பெங்களூரு-2, ஆந்திர மாநிலம் சித்தூர்-1 என மொத்தம் 69 இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது

நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் பதிவு செய்த வழக்கில் தங்கமணி, அவரது மகன் தரணிதரன் இருவரும் வருவாய்க்கு அதிகமாக சேர்த்த சொத்துகளை தமிழகம் மற்றும் வெளியிடங்களில் உள்ள தங்களது உறவினர்கள், ஆதரவாளர்கள் பெயரில் வைத்துள்ளனர். மேலும், முறைகேடான வழியில் ஈட்டிய பெரிய தொகையை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  • 657
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads