சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8223 news
  •  ·  5 friends
  • I

    9 followers

பிபின் ராவத், மனைவி உடல்கள் தகனம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 

 

இறந்தவர்களின் உடல்கள் நேற்று டெல்லி கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து இன்று  டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உடல் கொண்டு செல்லப்பட்டது.

 

பிபின் ராவத்தின் மகள்கள் கிரித்திகா மற்றும் தாரணி ஆகியோரும், பெற்றோரின் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் இறுதி ஊர்வலம் காமராஜர் மார்க் பகுதியில் தொடங்கியது.  

 

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இலங்கை, பூடான், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளின் ராணுவ அதிகாரிகள் வருகை தந்தனர்.  முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலத்தில் தேசிய கொடி ஏந்தி பொதுமக்கள் விண்ணை முட்டும் அளவிற்கு முழக்கமிட்டே வந்தனர்.    

 

சீனாவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய முப்படைகளின் தளபதி பிபின் ராவத்திற்கு மக்கள் பிரியா விடை அளித்தனர். நாட்டிற்கு ஏற்பட்ட பல்வேறு அச்சுறுத்தல்களை முறியடித்த பிபின் ராவத்திற்கு பொதுமக்கள் தங்களது இறுதி நன்றி கடனாக வீட்டில் இருந்து தொடங்கி மயானம் வரை வழிநெடுக தேசிய கொடி ஏந்தி பாரத் மாதாகி ஜே, வந்தே மாதரம்.என  கூறி அவருக்கு தங்களது கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக செலுத்தினர். 

 

பிபின் ராவத்தின் சொந்த மாநிலமான உத்தராகண்டில் இருந்து பலர் வருகை தந்து வீர மகன் முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.  வாகனம் முன் வாத்தியங்களுடன், இசைக்கருவிகளுடன் வீரர்கள் அணிவகுத்து வந்தனர். 

 

டெல்லி கன்டோன் மென்ட் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட முப்படை தலைமை தளபதி பிபின்ராவத், அவரது மனைவி மதுலிகா உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

 

பிபின் ராவத், மதுலிகா ராவத்தின் உடலுக்கு அவரது மகள்கள் இறுதிச்சடங்குகளை தங்களது பெற்றோருக்கு கண்ணீர் மல்க செய்தனர்.

பின்னர் கன்டோன்மென்ட் மயானத்தில் பிபின் ராவத் மற்றும்  மனைவி மதுலிகா ராவத்  உடல் தகன மேடைக்கு கொண்டு வரப்பட்டது. பிபின் ராவத் மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடியை அகற்றி அவரது மகளிடம் முறைப்படி ராணுவத்தினர் ஒப்படைத்தனர்.

 

ஒரே தகன மேடையில் பிபின் ராவத், அவரது மனைவி உடல்கள் வைக்கப்பட்டன. அதன் பின்னர் பிபின் ராவத், அவரது மனைவி உடலுக்கு மகள்கள்  தீ மூட்டினர். அப்போது  முழு ராணுவ மரியாதையுடன் 17 சுற்று பீரங்கி குண்டுகள் முழங்க 800 வீரர்களின் மரியாதையுடன் பிபின்ராவத் உடல் தகனம் செய்யப்பட்டது.

 

  • 660
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads