
இலங்கையில் இன்று இதுவரையில் 757 பேருக்கு கொரோனா
இலங்கையில் மேலும் 185 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதனடிப்படையில் இன்றைய தினத்தில் மாத்திரம் 757 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 569,928 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (08) உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,533 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 356 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.