
நான் எதுக்கு பிறந்தேன் பிரசவம் பார்த்த மருத்துவர் மீது வழக்கு தொடர்ந்த பெண்
இங்கிலாந்து நாட்டின் லண்டன் நீதிமன்றத்தில் விசித்திர வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. எவீ டூம்ஸ் என்ற 20 வயது இளம்பெண் ஒருவர் தன்னுடைய பிறப்புக்கு பிரசவம் பார்த்த மருத்துவரான பிலிப் மிட்செல் என்பவருக்கு எதிராக வழக்கு போட்டுள்ளார்.
இந்த வழக்கிற்கு எவீ டும்ஸ் கூறிய காரணங்கள் நீதிபதியை மேலும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. எவீக்கு முதுகு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு தனது வாழ்நாளை டியூப் உதவியுடன் கழித்து வரும் நிலையில் உள்ளார்.
மருத்துவர் பிலிப் தன்னுடைய தாயாருக்கு சரியான மருந்துகளை பரிந்துரைத்திருந்தால், கர்ப்பம் தள்ளி சென்று, தான் பிறந்திருக்காமல் இருந்திருப்பேன் என தெரிவித்துள்ளார். அவரது வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதி ரோசாலிண்ட் கோ குறிப்பிடத்தக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளார்.
எவீயின் தாயாருக்கு சரியான அறிவுறுத்தல்களை பிலிப் வழங்கியிருந்தால், கர்ப்பம் தள்ளி சென்றிருக்கும். அதன்பின்னர் கர்ப்பம் தரிக்கும்போது ஆரோக்கியமுள்ள குழந்தை பிறந்திருக்கும் என கூறி எவீக்கு இழப்பீடாக பெருந்தொகை கிடைப்பதற்கான உரிமை உள்ளது என தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
எவீயின் தாயார் நீதிமன்றத்தில் கூறும்போது, நல்ல முறையில் முன்பே சரிவிகித உணவு எடுத்திருந்தால் ஆரோக்கியமான குழந்தை பிறந்திருக்கும். போலிக் ஆசிட் எடுத்து கொள்ள வேண்டாம் என டாக்டரால் அறிவுறுத்தப்பட்டேன் என தெரிவித்துள்ளார். இந்த, விசித்திர வழக்கு நீதிபதிகளை மட்டுமின்றி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.