Category:
Created:
Updated:
இலங்கையில் மேலும் 508 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 565,979 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (2) உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,419 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். கொரோனா தொற்றில் இருந்து மேலும் 412 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 541,536 ஆக அதிகரித்துள்ளது.