சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8225 news
  •  ·  5 friends
  • I

    9 followers

ஒமிக்ரோன் எல்லா இடங்களிலும் பரவியிருக்கக் கூடும் - எச்சரிக்கை

ஒமிக்ரோன் கொரோனா பாதிப்பு எல்லா இடங்களிலும் பரவியிருக்கக்கூடும் என பெங்களூரு மாநகர ஆணையர் கௌரவ் குப்தா எச்சரித்துள்ளார்.

கர்நாடகத்தில் இருவருக்கு ஒமிக்ரோன் கொரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. ஒருவர் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் மருத்துவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதுபற்றி கௌரவ் குப்தா கூறியது : மருத்துவருக்கு நவம்பர் 22 ஆம் திகதி தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. நவம்பர் 24 ஆம் திகதி ஒமிக்ரோன் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் ஒமிக்ரோன் கொரோனா வகை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஆனால், அவருக்கு காய்ச்சல், உடம்பு வலி போன்ற அறிகுறிகள் தென்படத் தொடங்கின. அவர் தற்போது அடுத்தகட்ட சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

அவர் எந்தப் பயணமும் மேற்கொள்ளவில்லை. அவருடன் தொடர்பிலிருந்த 218 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 5 பேருக்கு மட்டும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களது மாதிரிகள் ஒமிக்ரோன் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து பங்கேற்ற ஏராளமான மருத்துவர்களுடன் இவரும் பங்கேற்றிருக்கிறார்.

ஒமிக்ரோன் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள மருத்துவர் எந்தப் பயணமும் மேற்கொள்ளாததால், இது ஏற்கெனவே எல்லா இடங்களிலும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. நாம் அச்சப்படத் தேவையில்லை, அதேசமயம் கவனமாக இருக்க வேண்டும். முகக் கவசம் அணிவதும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதும் கட்டாயம்.

யாரும் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. கொரோனா வழிமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

ஒமிக்ரோன் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ள மற்றொருவர் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 66 வயது மிக்க ஆண். அவர் பெங்களூருவில் இருந்துள்ளார். பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் நவம்பர் 20 ஆம் திகதி அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரோன் கொரோனா பரிசோதனை முடிவுகள் டிசம்பர் 2 ஆம் திகதி வெளிவந்தன. அதில் ஒமிக்ரோன் கொரோனா வகை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவர் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டார். அவருடன் தொடர்பிலிருந்த 264 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், அவர்கள் தொடர் கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அந்த நபர் மற்றொரு தனியார் ஆய்வகத்தில் பரிசோதனை மேற்கொண்டார். அதில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ஏற்கெனவே திட்டமிட்டப்பட்ட நிகழ்ச்சிகள் இருந்ததால், அவர் பின்னர் டுபாய்க்குப் புறப்பட்டுச் சென்றார்" என்றார் கௌரவ் குப்தா.

  • 753
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads