சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8216 news
  •  ·  5 friends
  • I

    9 followers

‘ஒமிக்ரான்’ வைரஸ் பல நாடுகளில் பரவ தொடங்கியது.

தென்ஆப்பிரிக்காவில் உருவான ‘ஒமிக்ரான்’ என்ற புதியவகை கொரோனா வைரஸ், உலகை அச்சுறுத்தி வருகிறது.

இந்த கொரோனா, இங்கிலாந்தில் ஏற்கனவே செம்ஸ்போர்டு, நாட்டிங்ஹாம் ஆகிய நகரங்களில் தலா ஒருவருக்கு தாக்கி இருந்தது. இந்தநிலையில், மூன்றாவதாக ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தென்ஆப்பிரிக்காவில் சில நாட்கள் இருந்து விட்டு இங்கிலாந்துக்கு திரும்பியவுடன் ‘ஒமிக்ரான்’ உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் நடமாடிய இடங்களில் தொற்று பரவி இருக்கும் அபாயம் இருப்பதால், அந்த இடங்களில் சுகாதார அதிகாரிகள் பரிசோதனை நடத்தி வருகிறார்கள்.

இதுபோல், ஸ்காட்லாந்தில் 6 பேருக்கு ‘ஒமிக்ரான்’ தாக்கி இருப்பதாக ஸ்காட்லாந்து அரசு கூறியுள்ளது. இதனால், இங்கிலாந்தில் ‘ஒமிக்ரான்’ தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளை தவிர, மற்ற இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என்று இங்கிலாந்து சுகாதார மந்திரி சஜித் ஜாவீத் அறிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் 8 பேருக்கு ‘ஒமிக்ரான்’ தாக்கி இருக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. கடந்த 14 நாட்களில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்று திரும்பிய நிலையில், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் அவர்களும் அடங்குவர். அவர்களுக்கு ஆல்பா, டெல்டா, பீட்டா போன்ற உருமாறிய கொரோனா வகைகள் இல்லை. எனவே, ‘ஒமிக்ரான்’ தாக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றிய பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு வந்த 2 பேருக்கு ஏற்கனவே ‘ஒமிக்ரான்’ உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில், தென்ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்த 30 வயது வாலிபருக்கு ‘ஒமிக்ரான்’ தாக்கியுள்ளது. இதையடுத்து, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருவதற்கு ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது.

நெதர்லாந்தில் 13 பேருக்கு ‘ஒமிக்ரான்’ உறுதி செய்யப்பட்டது. கனடாவில் 2 பேருக்கு நோய் தாக்கி உள்ளது. ஹாங்காங், ஐரோப்பா, வடஅமெரிக்கா என பல நாடுகளிலும் கால் பாதித்துள்ளது.

இப்படி பல நாடுகளில் ‘ஒமிக்ரான்’ பரவி வருவதால், அந்த நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. வெளிநாட்டினர் வருகைக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளது. மொராக்கோவில் 2 வாரங்களுக்கு விமானங்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் இருந்து வருபவர்களுக்கு ஜப்பான் 10 நாள் கட்டாய தனிமைப்படுத்தும் நடவடிக்கை அறிவித்துள்ளது. அத்துடன், எல்லைகளை மூடுவது பற்றி பரிசீலித்து வருவதாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கூறியுள்ளார்.

அனைத்து வெளிநாட்டு விமானங்கள் வருகைக்கு மொராக்கோ தடை விதித்துள்ளது. கடந்த 2 வாரங்களில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பட்டியலை வைத்து அவர்களை இத்தாலி தேடி வருகிறது. இதுபோல், தென்ஆப்பிரிக்கா மற்றும் இதர 7 ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருவதற்கு அமெரிக்கா நேற்று தடை விதித்தது.

இத்தகைய பயண தடைகளுக்கு தென்ஆப்பிரிக்க அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதிய உருமாறிய வைரசை வேகமாக கண்டுபிடித்ததற்கு தங்களை தண்டிப்பதா? என்று கேட்டுள்ளது.

இதற்கிடையே, அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவன இயக்குனர் பிரான்சிஸ் காலின்ஸ், ‘ஒமிக்ரான்’ வைரஸ் மற்ற உருமாறிய கொரோனாக்களை விட ஆபத்தானதாக இருக்கும் என்று தான் கருதவில்லை என்று கூறியுள்ளார்.

அதே சமயத்தில், ‘ஒமிக்ரான்’ வைரஸ் உலக அளவில் பரவுவதற்கான வாய்ப்பு அதிக அளவில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘‘உருமாறும் தன்மை, நோய் எதிர்ப்பு சக்திக்கு கட்டுப்படாத தன்மை ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது, எதிர்காலத்தில் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது. இதனால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும்.

இதுவரை உயிரிழப்பு ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் மாதிரிகளை எடுத்து பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். நிச்சயமற்ற நிலை நீடித்தாலும், தற்போதைய தடுப்பூசிகள் ஓரளவுக்கு பாதுகாப்பானவை’’ என்று கூறப்பட்டுள்ளது.

  • 641
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads