சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8217 news
  •  ·  5 friends
  • I

    9 followers

வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை புறநகர் பகுதிகள்

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்த நிலையில் நேற்று காலை முதல் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கன மழை விட்டு விட்டு பெய்து வந்தது.  

நேற்று இரவு முதல் தற்போது வரை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலைகள் மட்டுமின்றி குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக ஆவடி பூந்தமல்லி சாலை சிடிஎச் சாலை போன்ற பிரதான சாலைகளில் மழைநீர் அதிகளவில் உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளான  ஸ்ரீராம் நகர் பருத்திப்பட்டு வசந்தம் நகர் பட்டாபிராம், கோபாலபுரம், சோழம்பேடு, கோவில்பதாகை போன்ற பல்வேறு பகுதிகளில் குடியிருப்பை மழைநீர் சுமார் 3 அடி அளவிற்கு  சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

திருவள்ளூர் அருகே வீட்டுக்குள் மழை நீர் புகுந்ததால் திருவள்ளூர் ஆவடி நெடுஞ்சாலையில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் உள்ள போலிவாக்கம் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் திருவள்ளூர் - ஸ்ரீ பெருமந்தூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

ஆவடியில் மழைநீர் வெளியேற போதிய வழிவகை இல்லாத காரணத்தினால் கடந்த வட கிழக்கு பருவ மழை முதல் தற்போது வரை இப்பகுதி மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆவடி மாநகராட்சி அதிகாரிகள்  அதிகாலை முதல் நீர் தேங்கி உள்ள பகுதிகளை ஆய்வு செய்த நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

  • 592
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads