சினிமா செய்திகள்
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
காலத்தால் அழியா கலைஞன் குலதெய்வம் ராஜகோபால்
விவேக்கிற்கு முன்பே ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டத்தைப் பெற்றவர் குலதெய்வம் ராஜகோபால். ஓப்பீடே இல்லாத நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கலைஞர். தனது நகை
சிவாஜி கணேசனை பாராட்டிய சாவித்திரி
'பாசமலர்’ வெளியான தினத்தில் மாறுவேடத்தில் திரையரங்குக்கு சென்று படம் பார்த்துவிட்டுத் திரும்பிய சாவித்திரி, “படம் பார்த்து முடித்து பெண்கள் வெளியே போன
ரஜினிகாந்தின் கேளம்பாக்கம் பங்களா
ரஜினிகாந்த் எந்த ஒரு பின்புலனும் இல்லாமல் சினிமாவில் உயர்ந்தவர். ஆனால் அவருக்கு சொத்து எக்கசக்கமாக அதிகரித்தது. அப்படி ஒன்று தான் கேளம்பாக்கம் பங்களா.
நடிகர் சிவாஜி நடிப்பின் மேல் வைத்திருந்த தொழில்பக்தி
1972ல் ராஜா படத்தில் சிவாஜி நடித்துக் கொண்டு இருந்தார். அப்போது பாலாஜியின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று தெரியாமலே இருந்தது. 1972, மே 4ல் ராஜா ப
Ads
 ·   ·  7508 news
  •  ·  5 friends
  • I

    9 followers

கிண்ணியா குருஞ்சாக்கேணி சம்பவம் தொடர்பான அமைச்சரின் அறிக்கை

கிண்ணியா குருஞ்சாக்கேணி கலப்பின் ஊடாக பாலம் நிர்மாணிக்கப்படும் வரை மூன்றரை கிலோ மீற்றர் தூரமான மாற்று வழியொன்றை பயன்படுத்துவதற்கு கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை அங்கத்தவர்கள் முழுமையான சம்மதம் தெரிவித்திருந்தனர்.

எவ்வாறாயினும், இந்தப் பாதை அதிக தூரம் கொண்டது எனக்கூறி பிரதேச அரசியல்வாதிகளும், மக்களும் பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்ததாக கிராமிய வீதிகள் விசேட உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.

விசேடமாக அந்தப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 2021.07.09 ஆம் திகதி அன்று மூன்றரை மீற்றர் தூரமான பாதைக்கு பதிலாக மாற்று வழி ஒன்றை பயன்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை முன்வைத்தனர். இந்தக் கலப்பின் ஊடான படகுச் சேவை ஒன்றை ஆரம்பிக்கவே கோரிக்கை விடுத்தனர்.

இந்த யோசனையை கொள்கை ரீதியாக நாம் ஏற்றுக் கொண்டோம்.

படகுச் சேவையை ஆரம்பிக்க தனியார் துறையினர் இருக்கின்ற போதிலும் ஏன் இன்னும் ஆரம்பிக்கவில்லையென பிரதேச மக்கள் பிரதிநிதிகள் எம்மிடம் கேள்வி எழுப்பினர். பல கோரிக்கைகள் முன் வந்த போதும் முறையான தரங்களுக்கு அமைய சேவையை ஆரம்பிக்க வேண்டுமென்ற நோக்கில் நகரசபை, பிரதேச சபை அங்கத்தவர்கள் உட்பட தனியார் துறைக்கு அனுமதி கொடுக்கவில்லை. வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் படகுச் சேவைக்கு மாத்திரமே நாம் அனுமதி வழங்கினோம்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் படகுச் சேவை முன்னெடுத்துச் செல்லப்படும் நிலையில் தான் இந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் முறையான பரிசீலனை நடைபெற்று வருவதாக கிராமிய வீதிகள் விசேட உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா குறிப்பிட்டார்.

  • 573
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads