Ads
கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் இராணுவ வாகனமும் பாரவூர்தியும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் இராணுவ வாகனமும் பாரவூர்தியும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று (14) காலை இடம்பெற்ற விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,படகு ஒன்றினை இழுத்து சென்ற இராணுவ வாகனமும் சீமெந்து மூடைகளை ஏற்றிச்சென்ற பாரவூர்தியும் கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரத்தினை அண்மித்த பகுதியில் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகி வீதியை விட்டு விலகியுள்ளன.குறித்த விபத்தில் இருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் மற்றும் போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Info
Ads
Latest News
Ads