சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8223 news
  •  ·  5 friends
  • I

    9 followers

நுகர்வோரைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் கொள்கை

இலங்கையில் பின்தங்கிய பிரதேசங்களின் தொடர்பாடல் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளுக்காகத் தொலைத்தொடர்பு மேம்பாட்டுக் கட்டணத்தைப் பயன்படுத்துவதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நோக்கமாக இருக்கின்றதென, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனாநாயக்க தெரிவித்தார்.

தொலைத்தொடர்பு என்பது, தேசிய பொருளாதாரத்தின் முக்கிய பங்காளியாக அமைந்திருப்பதால், இலாபத்துக்கு மாத்திரம் வரையறுக்கப்படாமல், தேசிய பொருளாதாரத்தை இலக்கு வைக்கும் வேலைத்திட்டமொன்றைச் செயற்படுத்துமாறு ஜனாதிபதி வழங்கிய ஆலோசனையின் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

“கிராமத்துக்குத் தொடர்பாடல்” என்ற எண்ணக்கருவுக்கு அமைய, இன்று (14) முற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற வீடியோ தொழில்நுட்பத்துடனான ஊடகச் சந்திப்பின் போதே, பணிப்பாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“கிராமத்துக்குத் தொடர்பாடல்” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், இவ்வாண்டு இறுதிக்குள் 10 மாவட்டங்களுக்கான 100 ப்ரோட்பேண்ட் கவரேஜ் திட்டம் முழுமைப்படுத்தப்படும் என்றும் 2022 இறுதிக்குள், ஏனைய மாவட்டங்களும் உள்ளடங்களாக முழு நாட்டுக்குமான ப்ரோட்பேண்ட் கவரேஜ் வசதிகளை வழங்குவதற்கான திட்டமிடல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும், பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இந்தத் தொடர்பாடல் சேவை வழங்குநர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுக்க, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் “கிராமத்துக்குத் தொடர்பாடல்” வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் தொலைத்தொடர்புக் கோபுரங்களுக்கான 50 சதவீதச் செலவை, தொலைத்தொடர்புகள் அறக்கட்டளை ஏற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்தத் தொலைத்தொடர்புக் கோபுரங்கள், இதற்கு முன்னர் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டன என்றும் ஆனால் இம்முறை உள்நாட்டிலேயே அவை நிர்மாணிக்கப்படுவதால், புதிய பொருளாதாரத் துறையொன்றைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளது என்றும், பணிப்பாளர் நாயகம் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

  • 594
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads