
இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு இலங்கை பயன்படுத்தப்பட மாட்டாது
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு செயலுக்கும் இலங்கை பயன்படுத்தப்படுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதிபடத் தெரிவித்தாா்.
இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா, 4 நாள் பயணமாக இலங்கை சென்றிருந்தாா். ஜனாதிபதி கோட்டபபயவை அவா் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனா். இந்தச் சந்திப்புக்குப் பிறகு ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
சுற்றுலா, மின்னுற்பத்தி, கொரோனா பொருந்தொற்றுக்குப் பிறகு பொருளாதாரத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தோம்.
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு செயலுக்கும் இலங்கை பயன்படுத்தப்படுவதற்கு அனுமதிக்க மாட்டோம். விரிவான புரிதலின் அடிப்படையில் சீனாவுடன் இலங்கை நட்புறவைத் தொடா்கிறது. எனவே, அந்த நட்புறவு குறித்து சந்தேகம் கொள்ள வேண்டாம் என்று ஷ்ரிங்லாவிடம் கோட்டாபய ராஜபக்ஷ கூறினாா்.