சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8223 news
  •  ·  5 friends
  • I

    9 followers

போர்க்களமாக காட்சி அளித்த லகிம்பூர் நேரில் பார்த்தவர்கள் விளக்கம்

உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டம், பன்பீர்பூர் கிராமத்தில் நுழையும் போது மயான அமைதி நிலவுகிறது. விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட சாலை இந்திய-நேபாள எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.

 

லகிம்பூர் கெரியிலிருந்து  பன்பீர்பூர் வரை செல்லும் 80 கி.மீ தூர சாலையில், ஒவ்வொரு பத்து கி.மீ தொலைவிலும் விவசாயிகள் தடுப்புகள் அமைத்துள்ளனர். அவ்வழியே செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் தடுத்து நிறுத்தி விசாரித்த பின்  உள்ளே நுழைய விடுகின்றனர்.

 

போலீஸ் தரப்பில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளின் எண்ணிக்கை வெறும் ஐந்து மட்டுமே. அவர்கள் வாகனங்களை தடுத்து நிறுத்தி எவ்வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை.

 

விவசாயிகளின் மீது ஏற்றப்பட்ட கார் டயரின் தடங்கள் தெள்ளத்தெளிவாக கட்சியளிக்கின்றன. தப்பியோட முயன்ற விவசாயிகளின் அறுந்த காலணிகளும் அங்குள்ள சகதிகளில் தென்படுகின்றன. 

 

சாலையில் ஆங்காங்கே விவசாயிகள் போராட்டம் நடத்த பயன்படுத்திய கொடிகள், போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் சிதறிக் கிடக்கின்றன.  மத்திய இணை மந்திரி அஜய் மிஷ்ராவின் பாதுகாப்புக்கு உடன் வந்த வாகனங்களில் இரண்டு வாகனங்கள், அங்கு நடந்த கலவரத்தில் தீக்கிரையாக்கப்பட்டன.  சேதமடைந்த நிலையில் இருந்த அந்த வாகனங்களையும் காணமுடிகிறது.  

 

சம்பவம் நடந்த இடத்தின் மிக் அருகே, சாலையை ஒட்டியவாறு ஒரு துணை மின்நிலையம் உட்பட  நான்கு கட்டிடங்கள் இருந்தன. அந்த கட்டிடத்தில் குடியிருக்கும் விவசாயி சம்பவத்தை நேரில் பார்த்துள்ளார். 

 

விவசாயி அங்கு நடந்த துயர சம்பவத்தை பற்றி கூறுகையில், நான் சம்பவத்தன்று மாலை 3.30 மணியளவில் என் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தேன்.  அப்போது கூச்சல் மற்றும் அலறல் சத்தம் கேட்டது. இரண்டு கார்கள் அதி வேகமாக தறிகெட்டு ஓடியது. 

 

அந்த கார் செல்லும் வழியில் இருந்த அனைவரது மீதும் ஈவு இரக்கமின்றி ஏறியது. அப்போது அந்த வழியே பேருந்துகள் ஏதும் வந்திருக்குமாயின், இன்னும் பலர் பலியாகி இருப்பார்கள். 

 

சம்பவம் நடந்த குழப்பத்தில், துப்பாக்கி குண்டுகள் வெடிக்கப்பட்டன. இரண்டு கார்களில் ஒரு காரிலிருந்து நான்கு பேர் வெளியே வந்தனர், அவர்கள் வெளியே வந்ததும் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.

 

நான் வீட்டுக்குள் சென்று விட்டேன். ஆனாலும் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. அரை மணி நேரம் கழித்து, பின் வாசலை திறந்து பார்த்த போது, ஒரு நபர் போலீசாரின் உதவியோடு தப்பி ஓடிக்கொண்டிருந்தார். 

 

அந்த நபர் விவசாயிகளின் மீது இரணடு முறை துப்பாக்கி சூடு நடத்தியவர் என கூறினார்.

 

வன்முறை அதிகரித்த போது, 5 போலீஸ்காரர்கள் செய்வதறியாது அவருடைய வீட்டில் பாதுகாப்புக்காக தங்கியுள்ளனர். அதில் இருவர் பெண் போலீஸ்காரர்கள் ஆவர். துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் அவர்கள் பயந்து போய் இங்கு வந்து பாதுகாப்பாக இருந்துள்ளனர்.  அந்த விவசாயியையும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

 

சம்பவம் நடந்த சாலையின் அருகில் இருந்த துணை மின் நிலையத்தில் 10 பேர் இருந்துள்ளனர். அப்போது சம்பவத்தை நேரில் பார்த்த அங்கிருந்த மின்நிலைய அதிகாரி கூறுகையில், “நான் உட்பட என்னுடன் ஜூனியர் இன்ஜினியர் மற்றும் 8 பணியாளர்கள் உடனிருந்தனர். 

 

நாங்கள் பயத்தால் கதவை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்தோம். யாரையும் வெளியே செல்ல வேண்டாம் என்று கூறினோம். துப்பாக்கி சூடு சத்தம் தொடர்ந்து சில மணி நேரம் கேட்டுக் கொண்டே இருந்தது என கூறினார். 9 பேரை பலி கொண்ட சம்பவம் நடந்த போது, யுத்தக் களமாக காட்சி அளித்திருக்கிறது அந்த பகுதி என்பதில் சந்தேகம் இல்லை.

 

 

 

  • 724
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads