சினிமா செய்திகள்
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
காலத்தால் அழியா கலைஞன் குலதெய்வம் ராஜகோபால்
விவேக்கிற்கு முன்பே ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டத்தைப் பெற்றவர் குலதெய்வம் ராஜகோபால். ஓப்பீடே இல்லாத நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கலைஞர். தனது நகை
Ads
 ·   ·  7514 news
  •  ·  5 friends
  • I

    9 followers

போர்க்களமாக காட்சி அளித்த லகிம்பூர் நேரில் பார்த்தவர்கள் விளக்கம்

உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டம், பன்பீர்பூர் கிராமத்தில் நுழையும் போது மயான அமைதி நிலவுகிறது. விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட சாலை இந்திய-நேபாள எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.

 

லகிம்பூர் கெரியிலிருந்து  பன்பீர்பூர் வரை செல்லும் 80 கி.மீ தூர சாலையில், ஒவ்வொரு பத்து கி.மீ தொலைவிலும் விவசாயிகள் தடுப்புகள் அமைத்துள்ளனர். அவ்வழியே செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் தடுத்து நிறுத்தி விசாரித்த பின்  உள்ளே நுழைய விடுகின்றனர்.

 

போலீஸ் தரப்பில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளின் எண்ணிக்கை வெறும் ஐந்து மட்டுமே. அவர்கள் வாகனங்களை தடுத்து நிறுத்தி எவ்வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை.

 

விவசாயிகளின் மீது ஏற்றப்பட்ட கார் டயரின் தடங்கள் தெள்ளத்தெளிவாக கட்சியளிக்கின்றன. தப்பியோட முயன்ற விவசாயிகளின் அறுந்த காலணிகளும் அங்குள்ள சகதிகளில் தென்படுகின்றன. 

 

சாலையில் ஆங்காங்கே விவசாயிகள் போராட்டம் நடத்த பயன்படுத்திய கொடிகள், போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் சிதறிக் கிடக்கின்றன.  மத்திய இணை மந்திரி அஜய் மிஷ்ராவின் பாதுகாப்புக்கு உடன் வந்த வாகனங்களில் இரண்டு வாகனங்கள், அங்கு நடந்த கலவரத்தில் தீக்கிரையாக்கப்பட்டன.  சேதமடைந்த நிலையில் இருந்த அந்த வாகனங்களையும் காணமுடிகிறது.  

 

சம்பவம் நடந்த இடத்தின் மிக் அருகே, சாலையை ஒட்டியவாறு ஒரு துணை மின்நிலையம் உட்பட  நான்கு கட்டிடங்கள் இருந்தன. அந்த கட்டிடத்தில் குடியிருக்கும் விவசாயி சம்பவத்தை நேரில் பார்த்துள்ளார். 

 

விவசாயி அங்கு நடந்த துயர சம்பவத்தை பற்றி கூறுகையில், நான் சம்பவத்தன்று மாலை 3.30 மணியளவில் என் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தேன்.  அப்போது கூச்சல் மற்றும் அலறல் சத்தம் கேட்டது. இரண்டு கார்கள் அதி வேகமாக தறிகெட்டு ஓடியது. 

 

அந்த கார் செல்லும் வழியில் இருந்த அனைவரது மீதும் ஈவு இரக்கமின்றி ஏறியது. அப்போது அந்த வழியே பேருந்துகள் ஏதும் வந்திருக்குமாயின், இன்னும் பலர் பலியாகி இருப்பார்கள். 

 

சம்பவம் நடந்த குழப்பத்தில், துப்பாக்கி குண்டுகள் வெடிக்கப்பட்டன. இரண்டு கார்களில் ஒரு காரிலிருந்து நான்கு பேர் வெளியே வந்தனர், அவர்கள் வெளியே வந்ததும் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.

 

நான் வீட்டுக்குள் சென்று விட்டேன். ஆனாலும் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. அரை மணி நேரம் கழித்து, பின் வாசலை திறந்து பார்த்த போது, ஒரு நபர் போலீசாரின் உதவியோடு தப்பி ஓடிக்கொண்டிருந்தார். 

 

அந்த நபர் விவசாயிகளின் மீது இரணடு முறை துப்பாக்கி சூடு நடத்தியவர் என கூறினார்.

 

வன்முறை அதிகரித்த போது, 5 போலீஸ்காரர்கள் செய்வதறியாது அவருடைய வீட்டில் பாதுகாப்புக்காக தங்கியுள்ளனர். அதில் இருவர் பெண் போலீஸ்காரர்கள் ஆவர். துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் அவர்கள் பயந்து போய் இங்கு வந்து பாதுகாப்பாக இருந்துள்ளனர்.  அந்த விவசாயியையும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

 

சம்பவம் நடந்த சாலையின் அருகில் இருந்த துணை மின் நிலையத்தில் 10 பேர் இருந்துள்ளனர். அப்போது சம்பவத்தை நேரில் பார்த்த அங்கிருந்த மின்நிலைய அதிகாரி கூறுகையில், “நான் உட்பட என்னுடன் ஜூனியர் இன்ஜினியர் மற்றும் 8 பணியாளர்கள் உடனிருந்தனர். 

 

நாங்கள் பயத்தால் கதவை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்தோம். யாரையும் வெளியே செல்ல வேண்டாம் என்று கூறினோம். துப்பாக்கி சூடு சத்தம் தொடர்ந்து சில மணி நேரம் கேட்டுக் கொண்டே இருந்தது என கூறினார். 9 பேரை பலி கொண்ட சம்பவம் நடந்த போது, யுத்தக் களமாக காட்சி அளித்திருக்கிறது அந்த பகுதி என்பதில் சந்தேகம் இல்லை.

 

 

 

  • 588
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads