சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8223 news
  •  ·  5 friends
  • I

    9 followers

தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டது

தனிமைப்படுத்தல் ஊரடங்கு இன்று (01) அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்பட்டுள்ளது. இதற்கமைய ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய ,

# அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துத்துக்கான தடை தொடர்ந்து அமுலாகும்.

# இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே வெளியே செல்ல முடியும். சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைவாக பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணிக்க முடியும்.

# ஆசன எண்ணிக்கையின் அளவுக்கு அமைய பயணிப்பதற்கு மாத்திரமே அனுமதி.

# பொது போக்குவரத்தின் போது குளிரூட்டப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்த முடியாது.

# அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசத்தை அணிந்திருந்தல் வேண்டும்.

# நிறுவனங்களுக்கு வரும் பணியாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த வேண்டும்.

# வீடுகளில் இருந்து வேலை செய்யுமாறு பணியாளர்களை ஊக்குவிப்பது அவசியம். இது அத்தியாவசிய சேவைகள் சார்ந்த நிறுவனங்களுக்கு ஏற்புடையது அல்ல.

# கடமைக்காக அழைக்க வேண்டிய பணியாளர்களின் எண்ணிக்கையை நிறுவனத் தலைவர் தீர்மானிக்கலாம்.

# வைபவங்கள் மற்றும் மக்கள் ஒன்றுகூடும் விதத்திலான நிகழ்வுகளுக்கு ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை அனுமதியில்லை

# பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதியில்லை.

# வீடுகளிலோ, வெளியிலோ விருந்துகள், வைபவங்கள், ஒன்றுகூடல்களை நடத்த முடியாது.

# திறந்தவெளிச் சந்தைகள், வாராந்த சந்தைகள் போன்றவற்றை பிரதேச சுகாதர மருத்துவ அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் நடத்தலாம்.

# கடைகள், சில்லறை விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் போன்றவற்றில் சனநெரிசல் இல்லாத வகையில் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

# வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் உள்ளே 5 பேர் மாத்திரமே இருக்க முடியும் என்பதுடன் ஏனைய வாடிக்கையாளர்கள் நிறுவனத்திற்கு வெளியே 1 மீட்ட இடைவெளியை பேணி வரிசையில் நிற்க வேண்டும்.

# சிகையலங்கார நிலையங்களில் வாடிக்கையாளர்கள் தமக்கான நேரத்தை முற்கூட்டியே ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.

# திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும்.

# இதேவேளை, பாடசாலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சுகாதார அமைச்சின் தீர்மானத்திற்கு அமைய, ஆரம்பத்தில் 200 க்குக் குறைவான மாணவர்களுடன் கூடிய பாடசாலைகள் திறக்கப்படும். அவை திறக்கப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

# முன்பள்ளிகளை மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் அரைவாசிப்பேருடன் இயங்க வைக்கலாம்.

# தனியார் வகுப்புக்களுக்கு அனுமதியில்லை.

# சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய நீதிமன்றங்கள் இயங்க அனுமதி.

# மதவழிபாட்டுத் தலங்களில் கூட்டுப் பிரார்த்தனைகள், ஒன்றுகூடல் போன்றவற்றிற்கு அனுமதியில்லை.

# திருமண பதிவிற்காக ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை 10 பேருக்கும் ஒக்டோபர் 16 ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை 50 பேருக்கும் அனுமதி.

# மரணச் சடங்குகளில் 15 ஆம் திகதி வரை 10 பேருக்கும் ஒக்டோபர் 16 ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை 15 பேருக்கும் அனுமதி பூதவுடல் விடுவிக்கப்பட்டு 24 மணிநேரத்திற்குள் இறுதிக் கிரியைகளை நிறைவேற்ற வேண்டும்.

# உடற்பயிற்சி ஒழுங்கைகள், கடற்கரையோரங்களில் நடமாட மக்களுக்கு அனுமதி உண்டு. இருந்தாலும், 15 ஆம் திகதி வரை விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. சகல சந்தர்ப்பங்களிலும் பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு அனுசரிக்கத் தவறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

  • 662
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads