சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்
நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், எங்களிடம் கலந்தாலோசித்து, அதன் பின்னர் பணிகளை து
யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது
யோகி பாபு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘போட்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்ற
பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நட
நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்
கடந்த 1997ம் ஆண்டில் பிரபுவின் பொன்மனம் என்ற படம் மூலம் தமிழில் என்டரி ஆனவர் நடிகர் முத்துக்காளை. முன்னதாக ஸ்டண்ட் மாஸ்டராக இவர் படங்களில் பணியாற்றிய
வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ரிலீஸாக வெளியாகிறது. இந்தி திணிப்பை பற்றிய பட
மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை
விஜய் டிவி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஷ்வினி. இவர் தற்போது பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.விஜய்
சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்
திகில் கதையாக கடந்த 2015ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில், டிமாண்டி காலனி படம் வெளிவந்தது. இதில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். விறுவ
'பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது
ஜூலை 26'ம் தேதி வெளியாகவுள்ள பிதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், 23' மணி நேரம், 23' நிமிடங்களில் எடுக்கப்பட்ட
'ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி
தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்திற்கு சிறப்பு காட்ச
’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூரி நடித்த ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்
சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
Ads
 ·   ·  7800 news
  •  ·  5 friends
  • I

    9 followers

வேலைக்காரி வேடத்தில் கொள்ளைக்காரி

கும்பகோணம், பாபநாசத்தில் வீட்டு வேலைக்காரி போல் நடித்து உரிமையாளருக்கு காபியில் மயக்க மருந்து கொடுத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற பலே திருடியை போலீசார் தேடி வருகின்றனர்.

பாபநாசம் தெற்கு வீதியில் வசித்து வருபவர் திருநாவுக்கரசு. இவரது மனைவி ஜெயலட்சுமி (52). இவர்கள் தஞ்சை பாபநாசம் சாலையில் முத்து மெஸ் கிராமிய முறை சமையல் என்ற சைவ உணவு விடுதியை‌ நடத்தி வருகின்றனர். 

இவர்களது உணவு விடுதிக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து உணவு வாங்க வந்த பெண் ஒருவர், விஜயலட்சுமியிடம் தன்னுடைய பெயர் சாந்தா எனவும், கிடைக்கும் வேலைகளை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். தற்போது தனக்கு வேலை எதுவும் இல்லை என்றும், எனவே தங்கள் உணவு விடுதியில் வேலை வழங்குமாறு கேட்டுள்ளார்.

விஜயலட்சுமி தன்னுடைய கணவரிடம் கேட்டு விட்டு சொல்கிறேன் என கூறி அனுப்பியுள்ளார். பின்னர் தனது கணவர் திருநாவுக்கரசுவிடம் பெண் ஒருவர் வேலை கேட்டு வந்ததையும், எனக்கு உடல்நிலை சரி இல்லை என்பதால், அந்தப் பெண்ணை வீட்டு வேலைக்கு வைத்துக் கொள்ளட்டுமா என கேட்டுள்ளார்.

திருநாவுக்கரசு சம்மதம் தெரிவித்து, நேற்று அந்தப் பெண்ணை அழைத்து முகவரி மற்றும் அவர் குறித்த தகவல்களை சேகரித்து, அந்தப் பெண்ணின் புகைப்படத்தை தனது செல்போனில் எடுத்து வைத்துக்கொண்டு நாளை முதல் வேலைக்கு வருமாறு கூறி அனுப்பியுள்ளார். அதன்படி இன்று காலை வீட்டு வேலைக்கு சாந்தா வந்துள்ளார்.

திருநாவுக்கரசு கும்பகோணத்திற்கு சென்று வருவதாக தனது மனைவி விஜயலட்சுமியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து வீட்டில் விஜயலட்சுமி வேலைக்காரி சாந்தாவுடன் இருந்துள்ளார். அப்போது சாந்தா விஜயலட்சுமிக்கு காப்பி போட்டுக் கொடுத்துள்ளார். அதனை குடித்த விஜயலட்சுமி சிறிது நேரத்தில் மயங்கினார். 

சாந்தா விஜயலெட்சுமி அணிந்திருந்த தாலிசெயின், வளையல், மோதிரம், தோடு உள்பட 6 1/2 பவுன் நகையை திருடி சென்று விட்டார். இதையடுத்து கும்பகோணத்திலிருந்து வீட்டிற்கு திரும்பி வந்த திருநாவுக்கரசு, வீட்டில் தனது மனைவி மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டு வேலைக்காரி சாந்தாவை அழைத்துள்ளார். ஆனால் அவர் அங்கு இல்லை. 

விஜயலட்சுமி அணிந்திருந்து நகைகள் அனைத்தும் காணாமல் போயிருப்பதை பார்த்த அவர், வீட்டு வேலைக்காரி போல் நடித்து தனது மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகளை சாந்தா திருடிச் சென்றிப்பதை அறிந்தார்.

திருநாவுக்கரசு பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராணி, தலைமை காவலர் ராமநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 

திருநாவுக்கரசு போலீசாரிடம் சாந்தாவின் முகவரி உள்ளிட்ட விவரங்களை வழங்கினார். அதனைக்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் அனைத்தும் போலி என தெரியவந்தது. பின்னர் திருநாவுக்கரசர் தனது செல்போனில் எடுத்த சாந்தாவின் படத்தை போலீசிடம் வழங்கினார்.

போலீசார் அந்த மோசடி பெண்ணின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். விஜயலட்சுமிக்கு அதிக அளவிலான மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். 

  • 652
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads