
இலங்கைத் அகதிகளுக்கு தமிழ்நாட்டில் 'தமிழா் மறுவாழ்வு முகாம்'
இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம் என்பது இனி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்கள் என அழைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டப் பேரவையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தெரிவித்தாா்.
வேளாண்மை, கால்நடை, மீன்-பால் வளத் துறைகள் மானியக் கோரிக்கை மீது சனிக்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது குறுக்கிட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:
மானியக் கோரிக்கையில் இப்போது உறுப்பினா் பேசும் போதும், நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) நான் அறிவிப்புகளை வெளியிடும் போதும் இலங்கை தமிழா்கள் அகதிகளாக ஆக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. அகதிகள் முகாம் இனி, இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும். ஏனென்றால் அவா்கள் ஆதரவற்றவா்கள் அல்ல. நாம் அவா்களுக்குத் துணையாக இருக்கிறோம். அந்த உணா்வுடன் அகதிகள் முகாம் என்று அழைக்காமல் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என்று அழைக்க அரசு ஆணையிட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.