
ஜெர்மனியில் பீட்சா டெலிவரி செய்யும் ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர்
ஆப்கானிஸ்தானில் 2018 முதல் 2020 வரை அமைச்சராக இருந்த சையது அஹமது ஷா சதாத் இப்போது ஜெர்மனியில் பீட்ஸா டெலிவரி செய்பவராக உள்ளார்.தலீபன்களுடன் அமெரிக்கா செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, அமெரிக்கா ஆகஸ்ட் 31 க்குள் தனது படைகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள வேண்டும். ஆனால் இன்னும் அவர்கள் சொன்ன அளவுக்கான மக்களை இன்னும் வெளியேற்றவில்லை. இதனால் அமெரிக்க படைகள் வெளியேறுவதில் கால நீட்டிப்பு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் மக்கள் பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து செல்ல ஆரம்பித்துள்ளனர்.ஆப்கானிஸ்தானில் 2018 -2020 தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த சையது அஹ்மத் ஷா சதாத் என்பவர் இப்போது ஜெர்மனியில் பீட்ஸா டெலிவரி செய்யும் ஊழியராக வேலை செய்து வருகிறாராம். இது சம்மந்தமாக அல் ஜஸிரா செய்தி வெளியிட்டுள்ளது. இவர் 2020 ஆம் ஆண்டே அதிபர் அஷ்ரப் கனியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.சையது அகமது ஷா சதாத், ஜெர்மனியில் பீட்சா டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆரஞ்ச் நிற உடை அணிந்து முதுகில் உணவு பையுடன் வீடுவீடாக சைக்கிளில் சென்று அவர் உணவு டெலிவரி செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அவர் ஜெர்மனிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்றதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அவர் உணவு டெலிவரி செய்யும் பணி பார்ப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.