Category:
Created:
Updated:
இதுவரை கொவிட் தடுப்பூசியின் எந்தவொரு தடுப்பூசியையும் ஏற்றிக் கொள்ளாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்றைய தினம் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு ஐந்து நிலையங்களில் ´சைனோபார்ம்´ தடுப்பூசி வழங்கப்படுகிறது.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை, தேசிய தொற்றா நோய்த் தடுப்புப் பிரிவு, அவிசாவளை வைத்தியசாலை, விஹாரமகாதேவி பூங்கா போன்ற நிலையங்களில் காலை 8.30 தொடக்கம் தடுப்பூசிகளை ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளதாக இதுதொடர்பாக கொவிட்19 தொற்றுபரலை தடுக்கும் தேசிய செற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் வேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.