சினிமா செய்திகள்
பிரபல நடிகையின் ஆடையை மிதித்ததால் சர்ச்சையில் மாட்டினார் அக்‌ஷய்குமார்
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் பாலிவுட்டில் அதிகம் சம்பளம் பெரும் நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவ
’தலைவர் 171’ டைட்டில் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில
ஆபாச நடிகை என்று கூறிய விவகாரம் - கங்கனா ரணாவத் விளக்கம்
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ஊர்மிளா மடோன்கர். அதன்பினர், ரங்கீலா, சத்யா, ஜூடோய் உள்ளிட்ட பல படங்கலில் நடித்திருந்தார். இவர
வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே
கர்ப்பமாக இருக்கும் அமலா பால் - நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோ ஷூட்
தமிழ் சினிமாவில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'மைனா' படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் மனதை கட்டி போட
சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு திருமணம்
சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயத
எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு கஷ்டம்: டி.எம்.எஸ்
தான் பாடுவது போல் தெரியாமல் திரையில் தெரியும் அந்த நடிகர் பாடிக்கொண்டு நடிப்பது போல அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் திறன் படைத்தவர் டி.எம்.சௌந்திரராஜன
விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சேசு, இன்று தனது 60வது வயதில் காலமானார்.மாரடைப்பால் கடந்த 10 நாட்களாக சென்ன
கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்
நீயா நானா பாத்திடலாம்!. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்!.. கடைசியில என்ன நடந்தது!..கவுண்டமணி நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது நா
டி. எம். சௌந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
"அதிர்ஷ்டம் என்பது எப்போதோ ஒருமுறைதான் கதவைத் தட்டும்."‘தூக்குத்தூக்கி’.சிவாஜி நடிப்பில் இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். படத்தில் மொத்தம் எட்
Zoom செய்து பார்த்த ரசிகர்கள் - சிக்கிய ஸ்ரீலீலா
சில வீடியோக்களை பார்த்து நடிகைகளை கலாய்த்தும் பங்கம் செய்தும் காமெடி வீடியோக்கள் இணையத்தில் வெளி வந்து வைரலாகி வருதை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில்
ஜாக்கெட் அணியாமல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டார் பிரியாமணி
பிரியாமணி கடந்து 2010 ஆம் ஆண்டில் முஸ்தபா ராஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.திருமணத்திற்கு பிறகு சில வருடம் திரைப்படங்க
Ads
 ·   ·  7395 news
  •  ·  5 friends
  • I

    9 followers

மனைவியை கொன்று உடலை சூட்கேஸில் மறைத்து வைத்த போலி சமூக ஆர்வலர்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த மென்பொறியாளர் புவனேஸ்வரி. பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருக்கும் புவனேஸ்வரி கை நிறைய சம்பாதித்து வந்தார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் புவனேஸ்வரி, ஸ்ரீகாந்த் ரெட்டி என்பவரை திருமணம் செய்தார். அவர் கணவரோ ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற பெயரில் இயக்கம் ஒன்றை நடத்திக் கொண்டு தன்னை சமூக ஆர்வலராக உலகிற்கு காட்டி வந்தார்.

சுய விளம்பரத்திற்காக அவர் அவ்வப்போது தொலைக்காட்சிகளில் பேட்டிகள் கொடுப்பது, நிகழ்ச்சிகளை நடத்துவது  போன்ற செயலில் ஈடுபட்டு வந்தார். தன்னுடைய சொந்த செலவுக்கான பணத்தை மனைவி புவனேஸ்வரியிடமிருந்து வாங்கி செலவு செய்து வந்தார்.

சமூக ஆர்வலர் என்ற பெயரில் ஊர் சுற்றுவதுடன் நான் சம்பாதித்து வரும் பணத்தையும் வாங்கி வீண் செலவு செய்கிறாய் என்று புவனேஸ்வரிக்கும் ஸ்ரீகாந்த் ரெட்டிக்கும் இடையே அப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்தன.  புவனேஸ்வரிக்கு கடந்த ஓராண்டு முன்பு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற பின்னரும், கணவர் ஸ்ரீகாந்த் ரெட்டி, வேலைக்கு செல்லாமல், சமூக ஆர்வலர் என்ற போர்வையில் மனைவியிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தார்.

 கடந்த 4 நாட்களுக்கு முன் திருப்பதியில் அவர்கள் வசித்து வந்த அப்பார்ட்மெண்டில் மனைவி புவனேஸ்வரியை கொலை செய்த ஸ்ரீகாந்த் ரெட்டி அவருடைய உடலை ஒரு பெரிய சூட்கேசில் மறைத்து எடுத்துச் சென்று திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையின் பின்புறம் வைத்து எரித்து விட்டார்.

ஆனால் உறவினர்களிடம், புவனேஸ்வரிக்கு டெல்டா ப்ளஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்துவிட்டார். எனவே அவருடைய உடலை ஒப்படைக்காமல் எரித்து விட்டனர் என்று நாடகமாடினார்.

அவருடைய செயல்கள் மீது சந்தேகம் அடைந்த புவனேஸ்வரி உறவினர்கள், இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தி வந்த போலீசார் அவர்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது போலீசாரே உறைந்து போய்விட்டனர்.

அந்த கேமரா பதிவில் மனைவி புவனேஸ்வரியின் உடலை சூட்கேசில் அடைத்து வைத்து எடுத்து சென்றது தொடர்பான காட்சிகள் இருந்தன. ஒரு கையில் கைக்குழந்தையையும் மறுகையில் மனைவியின் உடலை சூட்கேசில் வைத்து இழுத்து சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதன் அடிப்படையில் விஜயவாடாவில் பதுங்கியிருந்த அவரை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். தங்களுடைய ஒரு வயது மகளை ஒரு கையில் பிடித்துக்கொண்டு மனைவியின் உடலை சூட்கேசில் மறைத்து எடுத்துச் சென்று எரித்த கொடூர கணவனுக்கு  தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

  • 869
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads