சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8216 news
  •  ·  5 friends
  • I

    9 followers

மனைவியை கொன்று உடலை சூட்கேஸில் மறைத்து வைத்த போலி சமூக ஆர்வலர்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த மென்பொறியாளர் புவனேஸ்வரி. பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருக்கும் புவனேஸ்வரி கை நிறைய சம்பாதித்து வந்தார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் புவனேஸ்வரி, ஸ்ரீகாந்த் ரெட்டி என்பவரை திருமணம் செய்தார். அவர் கணவரோ ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற பெயரில் இயக்கம் ஒன்றை நடத்திக் கொண்டு தன்னை சமூக ஆர்வலராக உலகிற்கு காட்டி வந்தார்.

சுய விளம்பரத்திற்காக அவர் அவ்வப்போது தொலைக்காட்சிகளில் பேட்டிகள் கொடுப்பது, நிகழ்ச்சிகளை நடத்துவது  போன்ற செயலில் ஈடுபட்டு வந்தார். தன்னுடைய சொந்த செலவுக்கான பணத்தை மனைவி புவனேஸ்வரியிடமிருந்து வாங்கி செலவு செய்து வந்தார்.

சமூக ஆர்வலர் என்ற பெயரில் ஊர் சுற்றுவதுடன் நான் சம்பாதித்து வரும் பணத்தையும் வாங்கி வீண் செலவு செய்கிறாய் என்று புவனேஸ்வரிக்கும் ஸ்ரீகாந்த் ரெட்டிக்கும் இடையே அப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்தன.  புவனேஸ்வரிக்கு கடந்த ஓராண்டு முன்பு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற பின்னரும், கணவர் ஸ்ரீகாந்த் ரெட்டி, வேலைக்கு செல்லாமல், சமூக ஆர்வலர் என்ற போர்வையில் மனைவியிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தார்.

 கடந்த 4 நாட்களுக்கு முன் திருப்பதியில் அவர்கள் வசித்து வந்த அப்பார்ட்மெண்டில் மனைவி புவனேஸ்வரியை கொலை செய்த ஸ்ரீகாந்த் ரெட்டி அவருடைய உடலை ஒரு பெரிய சூட்கேசில் மறைத்து எடுத்துச் சென்று திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையின் பின்புறம் வைத்து எரித்து விட்டார்.

ஆனால் உறவினர்களிடம், புவனேஸ்வரிக்கு டெல்டா ப்ளஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்துவிட்டார். எனவே அவருடைய உடலை ஒப்படைக்காமல் எரித்து விட்டனர் என்று நாடகமாடினார்.

அவருடைய செயல்கள் மீது சந்தேகம் அடைந்த புவனேஸ்வரி உறவினர்கள், இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தி வந்த போலீசார் அவர்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது போலீசாரே உறைந்து போய்விட்டனர்.

அந்த கேமரா பதிவில் மனைவி புவனேஸ்வரியின் உடலை சூட்கேசில் அடைத்து வைத்து எடுத்து சென்றது தொடர்பான காட்சிகள் இருந்தன. ஒரு கையில் கைக்குழந்தையையும் மறுகையில் மனைவியின் உடலை சூட்கேசில் வைத்து இழுத்து சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதன் அடிப்படையில் விஜயவாடாவில் பதுங்கியிருந்த அவரை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். தங்களுடைய ஒரு வயது மகளை ஒரு கையில் பிடித்துக்கொண்டு மனைவியின் உடலை சூட்கேசில் மறைத்து எடுத்துச் சென்று எரித்த கொடூர கணவனுக்கு  தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

  • 1049
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads