சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8218 news
  •  ·  5 friends
  • I

    9 followers

கொரோனா 3வது அலை தீவிரமாக இருக்காது- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த ஆண்டு பரவ தொடங்கி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இறுதி வரை கொரோனா முதல் கட்ட அலை பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

முதல் அலை ஓய்ந்த நிலையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் இந்த மாதம் வரை 2-வது அலை கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

கொரோனா முதல் அலையை விட 2-வது அலையில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டது. கொரோனா வைரசின் உருமாற்ற வீரியம் பெரும்பாலானவர்களிடம் நுரையீரலை தாக்கி கடும் பாதிப்பை ஏற்படுத்தியதால் உயிரிழப்பை தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

தற்போது 2-வது அலை ஓய்ந்து வரும் நிலையில் 3-வது அலை வரும் என்ற அச்சம் நிலவுகிறது. ஜூலை மாதம் 2-வது வாரத்தில் 3-வது அலை தொடங்கக்கூடும் என்று சில நிபுணர்கள் கூறி உள்ளனர். ஆனால் சிலர் செப்டம்பரில் 3-வது அலை கடுமையாக இருக்கும் என்று எச்சரித்து உள்ளனர்.

டெல்டா வைரஸ் கொரோனா 2-வது அலைக்கு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா வைரஸ் மேலும் உருமாறி டெல்டா பிளஸ் ஆக வீரியம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக 3-வது அலையில் அதிக பாதிப்பு ஏற்படும் என்று தகவல்கள் வெளியானது. குறிப்பாக குழந்தைகளை 3-வது அலை அதிகம் பாதிக்கும் என்று கூறப்பட்டதை நிபுணர்கள் மறுத்தனர். குழந்தைகளை மட்டுமே பாதிக்கும் என்பதில் உண்மை இல்லை என்றனர். 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகளும், லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகளும் ஒருங்கிணைந்து 3-வது அலை தொடர்பான புதிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

 2-வது அலை போல 3-வது அலை கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறப்பட்டு உள்ளது. 3-வது அலையின் தாக்கமும் தீவிரமாக இருக்காது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

நாடுமுழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருவதால் 3-வது அலையில் இருந்து பெரும்பாலானவர்கள் தப்ப முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதை தவிர ஒட்டுமொத்த சமுதாய அமைப்பிலும் நோய் எதிர்ப்பு சக்தி அளவு அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இதன்காரணமாக 3-வது அலையை எளிதில் சமாளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர். விஞ்ஞானிகளின் இந்த கருத்து ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.

  • 607
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads