சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  2941 news
  •  ·  1 friends
  • 2 followers

தமிழ் தாயகத்தை தமிழரே ஆழவேண்டும் - ஈ.பி.டி.பி ஸ்ரீகாந் சூளுரை

எமது மண்ணை நாங்களே ஆழ வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்பட்ட தியாகங்கள் அர்த்தமற்றுப் போகக்கூடாது என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர் செல்வம், தோல்விப் பயத்தில் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுதாகவும் தெரிவித்தார்.

யாழ் ஊடக மையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

"நேற்றைய தினம், ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக வித்தியாசமான செய்திகள் வெளியாகி இருப்பதாலும், அவற்றை வைத்து சிலர் எமக்கு எதிரான பொய்யான அவதூறுகளை பரப்புவதும் அவதானிக்கப்படுவதால், உண்மையில் என்ன நடந்தது என்பது எமது மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

உண்மையிலேயே குறித்த பகுதியில் எமது கட்சியின் ஆதரவாளர் ஒருவரின வீட்டில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் எமது செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

அதன்போது, எமது கட்சியின் செயற்பாட்டாளர்களாக கடந்த காலங்களில் செயற்பட்ட இருவர், நிறை மதுபோதையில் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்தனர்.

அவர்கள் எமது செயலாளர் நாயத்தினை நெருங்கிச் சென்று கதைப்பதற்கு முயற்சித்த போதிலும் அங்கிருந்தவர்களினால் அதற்கு அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் கூட்டத்தினை நிறைவு செய்து கொண்டு செயலாளர் நாயகம் புறப்படத் தயாரானபோது, மதுபோதையில் இருந்தவர்களுள் ஒருவர், எமது வாகனம் செல்வதற்கான வீதியில் தடையை ஏற்படுத்தும் நோக்கில் வீதியால் சென்ற உழவு இயந்திரத்திற்கு குறுக்காக விழுந்து படுத்துக் கொண்டார். அதன்போது அவருக்கு காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதுகின்றோம்.

இந்நிலையில் அங்கிருந்தவர்களும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து அவரை அப்புறப்படுத்தி உழவு இயந்திரத்தினை அனுப்பி வைத்ததை தொடர்ந்து, செயலாளர் நாயகத்தின் வாகனம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டனர்.

அதன் பின்னர் மதுபோதையில் இருந்ந 2 ஆவது நபர், எமது கூட்டம் நடாத்தப்பட்ட வீட்டிற்கு சென்று அங்கிருந்த பெண்மணியுடன் தர்க்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

இதனால், ஆத்திரமடைந்த ஊரவர்கள் குறித்த நபர் மீது தாக்குகதல் மேற்கொணட நிலையில், பொலிஸார் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்தியவரை கைது செய்துள்ளதுடன், உழவு இயந்திரத்தின் குறுக்கே படுத்து காயம் ஏற்படுத்திக் கொண்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதான் உண்மை.

இந்த சம்பவமானது திட்டமிட்ட முறையில் எமக்கு அவப் பெயரை ஏற்படுபடுத்தும் வகையில் திட்டமிடப்பட்ட சம்பவமாகவே பார்க்கின்றோம்.

எமது வெற்றி வாய்ப்பை தடுப்பதற்கு அனைத்து சூழ்ச்சிகளையும் அண்மைக்காலமாக முன்னெடுத்து வருகின்றவர்கள், ஊர்காற்றுறை பிரதேச சபையை ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி எளிதாக கைப்பற்றும் என்பதை உணர்ந்து கொண்டுள்ள நிலையில், வெற்றியை தடுப்பதற்கான முயற்சியாக இந்த சூழ்ச்சியை முன்னெடுத்த போதிலும், எமது தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் சகிப்புத் தன்மை, பொறுமை போன்றவற்றினால், இதனை திட்டமிட்டவர்கள் எதிர்பார்த்த விபரீதம் எதும் இடம்பெறாமல் தவிர்க்கப்பட்டு விட்டது.

தங்களுடைய பொய்களூம் புரட்டுக்களையும் எமது மக்கள் புரிந்து விட்டமையினால், தங்களுடைய உழறல்களும் கோமாளித்தனங்களும் எமது மக்கள் எரிச்சலடைய தொடங்கி விட்டமையினால் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமக்கு வெற்றி வாய்ப்பு அறவே இல்லாது போய் விட்டது என்பதை புரிந்து கொண்டவர்கள் எமக்கு எதிராக சூழ்ச்சிகளை மேற்கொண்டு மூக்கு உடைபட்டுப் போய் இருக்கின்றனர்.

இந்த நிலையில் எமது மக்கள் ஒன்றை மறந்து விடக்கூடாது. இந்த மண் எங்களின் மண். இதனை நாமே ஆள வேண்டும் என்பதற்காக அளப்பரிய தியாகங்கள் செய்யப்பட்டுள்ளன.

இற்றைக்கு 39 ஆண்டுகளுக்கு முன்னர் ஈழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதலாவது பெண் போராளியான ஷோபா இன்றைய நாளிலேயே தன்னுடை உயிரரை தியாகம் செய்திருந்தார்.

எந்த அமைப்பின் ஊடாக அந்த தியாகங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் அவை மதிக்கப்பட வேண்டும். வீண் போகக்கூடாது என்பதை மனதில் வைத்து உள்ளூராட்சி சபை தேர்தலில் மக்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

  • 861
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads